|
தமிழ் மொழி வரலாறு
104
அடிப்படை முக்கியத்துவம்
தெரியவரும். அவர் சில வேர்களின் பொருளைத் தருகிறார்.8
வேர்களை அவர்
தொழிற்பெயர் வடிவத்தில் தருகிறார். உருபுகளை நீக்க, வேர்கள் ஓரசையாகவோ ஈரசையாகவோ
இருக்கும்.
அவற்றின் வாய்பாட்டு
வடிவங்கள் வருமாறு :
1. ஓரசை வேர்கள் : “[மெய்] நெட்டுயிர் / குற்றுயிர் மெய்”.
2. ஈரசை வேர்கள் : “[மெய்] நெட்டுயிர்/குற்றுயிர்மெய் நெட்டுயிர்/குற்றுயிர்
மெய்”.
[இரண்டாவது அசையில்
குற்றுயிர் வருமிடங்களே மிகுதி]
1. 2 வேரல்லா உருபன்கள் (Non-root
Morphemes)
வேரல்லா உருபன்கள்
அல்லது இடைச்சொற்களின் பட்டியலில் பின் வருவன அடங்கும்.9
| |
1. காலம் காட்டும்
இடைநிலைகள்.
2. வேற்றுமை உருபுகள்.
3. உவம உருபுகள்.
4. அசைநிலை.5. இசைநிறை.
6. தத்தம் குறிப்பாற்
பொருள் உணர்த்துவன.
7. சாரியை. |
|
8.
தொல்காப்பியம்,
784 ஆவது நூற்பா முதல் 871 ஆவது நூற்பா முடிய.
9.
தொல்காப்பியம், 735
| |
“அவைதாம்
புணரியல் நிலையிடைப்
பொருணிலைக் குதவுநவும்
வினைசெயல் மருங்கில்
காலமொடு வருநவும்
வேற்றுமைப்
பொருள்வயின் உருபாகுநவும்
அசைநிலைக் கிளவி ஆகி
வருநவும்
தத்தம் குறிப்பிற்
பொருள் செய்குநவும்
ஒப்பில் வழியாற்
பொருள்செய்குநவும் என்று
அப்பண் பினவே நுவலுங்
காலை”.
|
|
|