தமிழ் மொழி வரலாறு
129
ஒன்று அடையாகிறது. அடை
அமைப்பைத் தெளிவுபடுத்த சில இடைச்சொற்கள் பயன்படுத்தப்படும் பிறிதொரு முறையும் உண்டு.
இவ்விடைச்சொற்கள் சாரியைகள் எனப்படும். சான்று : ‘மெய் + அளபு > மெய்யின் அளபு’.54
இங்கு ‘இன்’ என்பது சாரியையாகும். ஒழுக்கம் + களவு > ஒழுக்கத்துக்களவு.55
இங்கு அத்து என்பது சாரியையாகும். அடையும் எழுவாயின் கட்டுவடிவமும் சேர்ந்து அமைந்தவை
வினைமுற்று வடிவங்கள் ஆகும்; இங்ஙனம் அவை அடை அமைப்புகளுக்குச் சான்றுகளாகின்றன. அவை
சாரியையுடன் வரலாம்; சாரியையின்றியும் வரலாம்.
சான்று :
மரபு + இன் + து >
மரபிற்று (1011) இங்கு ‘இன்’ என்பது சாரியை
மரபு + இன் + அ >
மரபின் (594) இங்கு ‘இன்’ என்பது சாரியை
+ து >
மேற்று (1224) இங்கு சாரியை இடம் பெறவில்லை.
வேற்றுமை
ஏற்கத் திரிந்த வடிவங்களோடு பெயரெச்ச விகுதிகளைச் சேர்க்கலாம். இதன் விளைவாகக்
கிடைக்கும் வடிவத்தோடு பெயர்ப்பதிலி விகுதிகள் சேர்க்கப்படுகின்றன.
சான்று :
|
புறம் + அத்து > புறத்து + அ > புறத்த + அன் >
*புறத்தான் > புறத்தோன்.56
கழல் + இன் > கழலின் + அ > கழலின + அன் >
*கழலினான் > கழலினோன்.57 |
பழைய வடிவங்களுடன் அல்லது அவற்றின் பெயரெச்ச வடிவங்களுடன் பால் விகுதிகள்
நேரடியாகச் சேர்க்கப்படுகின்றன.
என்னும் > என்ம் + அர் என்மர் (சாரியையில்லாமல்)
பெயர்த்தன்மையது எனக் கருதப் பெறும் பெயரெச்சத்துடன் அல்லது ‘செய்யும்’ என்னும்
முற்றுடன், பால் விகுதிகள் சேர்க்கப் படுகின்றன.
54.
தொல்காப்பியம்,
11.
55.
தொல்காப்பியம்,
1092.
56.
தொல்காப்பியம்,
1013.
57.
அகநானூறு, 76, 77.
|
|