பக்கம் எண் :

New Page 3
 

தமிழ் மொழி வரலாறு

171

தொடர்ந்து வரும் இதழொலி அல்லது பல்லிதழ் ஒலி அகரத்தை இதழ்குவிவைப் பெறுமாறு செய்து உகரமாக்குகிறது.

சான்று :

கேசவன்

>

கேசுவன்

>

அமுது

>

அமிது

அருளின

>

அரிளின

சதுரத்து

>

சதிரத்து

செலுத்தி

>

செலித்தி

>

பெயரால்

>

பியரால்

செலவு

>

சிலவு

உருபனியல் மாற்றம்

மேலே குறிப்பிடப்பட்ட மாற்றம் உருபனியலில் ஏற்படும் ஒரு மாற்றத்தின் விளைவாலும் ஆகும். இவைகள் சாரியைகள் என்றழைக்கப்படுகின்றன; அதாவது இவை பழைய சிறப்பை இழந்து விட்ட உருபுகளாகும். தொல்காப்பியர் காலத்தில் ‘இன்’ என்பதைவிட ‘அன்’ என்பது பெருவழக்கு உடையதாக இருந்தது. பிற்காலத்தில் ‘அன்’ வருமிடங்களில், ‘இன்’ வருகிறது. தொல்காப்பியத்திலேயே இப்போக்கைக் காணலாம்.

+ அன் + அ > + இன் + அ > மேலின எனும் மாற்றம் இவ் உருபியல் மாற்றத்தின் விளைவாகலாம்.

உருபனியல் நிலையில் உள்ள பிறிதொரு போக்கால் இகரம் உகரமாக மாறியிருக்கலாம். ஒரு அடியோ (சான்று : பங்கு) அல்லது ‘செய்து’ எனும் வினை எச்சமோ (சான்று : கொண்டது) உகரத்தில் முடிந்தால் கட்டு வடிவங்களில் கூட அது பேணிக் காக்கப்படுகிறது. பின்வரும் உருபுகளிலுள்ள பழைய உயிர்கள் இழக்கப்படுகின்றன.

சான்று :

பங்கினால் > பங்குனால் (பங்கு + இன் + ஆல்)
        கொண்டது > கொண்டுது (கொண்டு + அ + து)

உருபனியல் நிலையில், ஒப்புமையாக்கத்தால் வரும் பிறிதொரு போக்கும் உண்டு. ‘செய்து’ எனும் வினை எச்சங்கள் பல உகரத்தில் முடிகின்றன. ஆனால் வேர்கள் என்பன குற்றுயிர் உகரத்தில்