|
தமிழ் மொழி வரலாறு 176
இதே சூழலில்
வேறிடங்களில் அகரம் நடுப் பின் உயிராகவோ அல்லது பின் இதழ்விரி உயிராகவோ
உச்சரிக்கப்படும். இக்கால உச்சரிப்புக்களிலும் இதழொலியாதலைக் காண்கிறோம். ‘கம்பம்
> கம்பொம் ணு
கம்பொ’ முன்னிலைப் பன்மை விகுதியான ‘உங்கள்’ என்பது ‘உங்கொள்’ என்றாகிறது. கள் >
கொள் ஆவது, வைணவ மணிப்பிரவாள நடையில் கூட இந்தக் கால கட்டத்தில் அமைந்துள்ளது.
‘கேட்டீர்கள்’ என்பத்றகுக் ‘கேட்டீர்கொள்’ என்ற வடிவத்தையும், ‘காடுகள்’ என்பதற்குக்
‘காடுகொள்’ என்பதையும் காண்கிறோம்.
இ > உ
பின்வருபவற்றை
நோக்குக. அவை பின்னர் விளக்கப்படும்.
|
களிறு |
> |
களுறு |
|
தமிழ் |
> |
தமுழ் |
|
தம்பிரான் |
> |
தம்புரான் |
|
மதில் |
> |
மதுல் |
|
முசிறி |
> |
முசுறி |
எகரமும்
பின்னரோ அல்லது முன்னரோ இதழ் ஒலிகளோ நாவளை ஒலிகளோ நுனியண்ண ஒலிகளோ வருமாயின்
இதழ்ச் சாயல் பெறுகிறது. சான்று : ‘எப்பேர்பட்ட > எப்போர்பட்ட’ என்பது 11, 12, 13
ஆம் நூற்றாண்டுகளில் வருகிறது.
|
தென்றிசை |
> |
தொன்றிசை |
|
செம்பாத |
> |
சொம்பாதி |
|
நெளித்து |
> |
நொளித்து |
|
செவிடு |
> |
சொவிடு |
‘சொவிடு’ என்ற வடிவம் பின்னர் ‘சோடு’ என்றானது. ‘செம்’ > ‘சொம்’ என்பதன்
அடிப்படையிலான ஒப்புமையாக்கத்தால் ‘செந்தாமரை > சொந்தாமரை’ என்றாகிறது.
இவற்றிலெல்லாம் எகரம் நடு உயிராகவும் இதழ்குவி உயிராகவும் ஆக்கப்படுகிறது.
5. 0 மெய்கள்ட், ற்
தொல்காப்பியர் காலத்தில் நாவளையொலியாக இல்லாதிருந்த டகரம் இப்பொழுது சமஸ்கிருதச்
செல்வாக்கால்
|