|
தமிழ் மொழி வரலாறு 191
‘எஃகொழி களிற்றின் வெய்துயிர்த்துயங்கி’7
இங்கு ‘கய்’,
‘எஃ’ என்பவையும் ‘எஃ’, ‘வெய்’ என்பவையும் எதுகையில் வருகின்றன.
ஆ. நம்மாழ்வார்
நம்மாழ்வார்
பாடல்களிலும் இத்தொடைநயத்தைக் காண்கிறோம்.
| சான்று : |
அஃதே
கொய் பூம் பொழில்8
செய்கோலத்து
அஃகாமால்9 |
திருக்குறளிலும் இத்தொடைநயமிருப்பதாகச் சுட்டிக்
காட்டப்படுகிறது.10
இ. இலக்கணம்
இக்காலத்திய
இலக்கண நூல்களில் இவ்வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.11
அவிநயத்தில் பின்வருவன உள்ளன :
இந்த
அடிப்படையில் ஆய்தத்திற்கும், யகரமெய்க்கும் இடையே உள்ள ஒத்ததன்மையை நிறுவலாம். தொடை
நயம் பற்றி வந்த எதுகை / மோனை காட்டுவதும் இதைத்தான்.
ஈ. கல்வெட்டுக்கள்
குகைக் கல்வெட்டுக்களின் இகர வரிவடிவத்தை 90கு
திருப்பினால் வரும் வடிவமே கல்வெட்டுக்களில் ஆய்தமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ‘ய் = இ’
என்பதை நாம் அறிவோம். எனவே இக்கல்வெட்டுக்கள் ஆய்தத்திற்கு ய் அல்லது இகர
மதிப்பைத் தருவதாகக் கொள்ளலாம்.
|
7.
பெருங்கதை, 1, 33, 109.
8.
திருவாய் மொழி, 4 - 11.
9.
திருவாய் மொழி, 4 - 11.
10.
திருக்குறள் ; 759.
11.
யாப்பருங்கல விருத்தி, 30.
|
|