|
தமிழ் மொழி வரலாறு 198
மொழியமைப்பைக்
கொண்டு நாயக்கர் காலத் தமிழின் வளர்ச்சி ஆராயப்பட்டுள்ளது. Êசில குறிப்புக்கள் இங்குத்
தரப்பெற்றுள்ளன.
இம்
மாற்றங்கள் ஒருசேர நிகழாது இங்கொன்றும், அங்கொன்றுமாக நிகழ்ந்தனவெனினும் அவை பிந்தைய
வளர்ச்சிகளைத் தெளிவுபடுத்தலாமாதலால் இங்குக் குறிக்கப்பட்டுள்ளன.
1. 1 உயிரொலி
மாற்றங்களின் சிறப்பு
உயிரொலிகளின் அளவு,
தன்மை ஆகியவற்றின் மாற்றமே இக்காலத்துக்குரிய சிறப்புக்கூறு ஆகும். இம்மாற்றம் முன்னரேயே தொடங்கி விட்டது.
2. 0 உயிர்கள்
2. 1 அளவு
நெடில் மெய்கள் அல்லது
மெய்ம் மயக்கங்களுக்குப் பிறகு உயிர்கள் குறுகும் போக்கு உள்ளது.
காண்பாம் > காண்பம்
தண்ணீர் > தண்ணி
இக்கால
உச்சரிப்பைக் கொண்டும், காண்போம் என்னும் மாற்று வடிவத்தைக் கொண்டும் காண்பம்
என்பதிலுள்ள அகர உயிர் சற்று இதழ் குவிதலோடு ஒலிக்கப்பெறுகிறதோ என ஐயுறலாம்.
2. 2 தன்மை
2. 2. 1 சுரபத்தி
அகரம் முதலான
உயிர்கள் மெய்கட்கு இடையில் வருகையில் மறைந்து மெய்ம் மயக்கங்கட்கு வழி வகுக்கின்றன.
பின்னர் சுரபத்தி இகரம் அல்லது உகரம் தோன்றுகிறது.
2. 2. 1. அ. இ > உ
நாவளை அல்லது இதழொலி
மெய்கள் வரும் சூழலில் உகரம் வருகிறது.
அடிமை >
*அட்’மை > அடுமை
[ மெய்1
] ‘உயிர்1, மெய்2 உயிர்2 மெய்3‘
என வரும் வேர்களின் வாய்பாட்டில் ‘உயிர்2‘ என்பது இகர உயிராகும் : ‘மெய்3’
என்பது வ் அல்லது ள் அல்லது ர் என்பதாகும். இந்நிலையில் இகரம் உகரமாகிறது.
|