|
தமிழ் மொழி வரலாறு 205
அ. க் > ய்
ககர மெய்க்கு முன்னர்
அல்லது அதை அடுத்து இகர உயிர் வருமாயின், அம்மெய் யகர மெய்யாக மாறுகிறது.
கன்னிகள் > கன்னியள்
துகில் > துயில்
எனவே ககரம்
யகரமாகத் திரிவதாகக் கொள்ளப் பெற்றது. இதனாலேயே கீழ்க்கண்ட மரூஉ வடிவங்கள்
அமைந்துள்ளன.
ஆ. ய் > க்
இடையூறு > இடைகூறு
மொழியிடை
வெடிப்பொலி இழக்கப்படுவதும் உண்டு. -ங்க் > -ங்-
சான்று: நாங்கள் >
நாஙள்
இது ‘நாங்கள் >
நாங்ஙள் > நாஙள்’ என்றாயிருக்க வேண்டும். ‘நாஙள் > நாமள்’ என்பது ‘நாம்’ என்னும்
வடிவம் இருப்பதால் ஏற்பட்டதாகும். மொழியிடையில் உள்ள மகரமெய் தெலுங்கிற் போலப் பகர
மெய்யாவது தெலுங்கு மொழி பேசுவோர் திருநெல்வேலியில் குடியேறியதன் விளைவாகலாம். இதனால்
கிடைக்கும் வடிவம் ‘நாம்பள்’ என்பதாகும்.
இ. ப் > வ்
சமஸ்கிருதச்
செல்வாக்கால் பகர மெய் உயிரிடையில் மட்டுமின்றி ஒலிப்பிலா மெய்களுக்குப் பின்னரும்
வருகிறது. இவை தமிழில் ஒப்புநிலைக்கேற்ப விடுப்பொலிகளைப் (releases) பெறுகின்றன.
ஈஸ்வரன்
> ஈஸ்பரன்
வகர உடம்படு
மெய்கூடச் சில இடங்களில் மூக்கொலிச் சாயல் பெற்று மூக்கொலியாகிறது.
சான்று : என்ன
+ ஓ > என்னவோ > என்னமோ
மூக்கொலிகள்
வருவதால் இவ்வாறு நிகழ்வதாக விளக்கலாம். ஆனால் ‘கவிய > கமிய’ என்பதை நோக்குக. (இங்கு
மூக்கொலி ஏதும் சூழலாக அமையவில்லை.)
3. 3. 2.
மூக்கொலிகள்
அ. ன் > ம்
பழைய நுனியண்ண
மூக்கொலியான னகரமெய், நெடிலுயிர்களுக்குப் பின்னரும் மகர மெய் போன்ற மெல்லின
மெய்களுக்குப் பின்னரும் இழக்கப்படுகிறது.
|