பக்கம் எண் :

இவ
 

தமிழ் மொழி வரலாறு

228

இவ்வரிவடிவ மரபுப்படி ‘-nge-’ என்பதிலுள்ள -‘g-’ என்பது
இடையண்ண வெடிப்பொலியாகும். ‘-nge-’ என்பதிலுள்ள ‘-g-’
என்பது கடையண்ண வெடிப்பொலியாகும்.

ககரம் பலவிடங்களில் சகரமாகக் குறிக்கப்படுகிறது.

தமிழ்ச் சகர மெய் (மொழி முதல் சகர மெய்யும் சகர மெய் இரட்டையும்) ‘ch’ என குறிக்கப்படுகிறது. ஆனால் அதனுடைய குழிந்துரசொலி உச்சரிப்பு ‘sh’ அல்லது ‘ss’ எனக் குறிக்கப்பட்டது.

kacu (காசு) > cash
vicai (வீசை) > viss

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மொழி முதல் சகர மெய் கூட ‘s’ எனக் குறிப்பிட்டது; ஏனெனில் இக்காலத்தில் சகர மெய் ‘s’ என மாறிவிட்டது.

சான்று : colai > solai

2. பின்வரும் சொற்களை ஆங்கிலேயர் ஆங்கிலேய முறைப்படி படித்தனர் ; ஆங்கில வரிவடிவ மரபுப்படி படித்தனர். நுனிநா பல் வெடிப்பொலியும் நாவளை வெடிப்பொலியும் (த், ட்) நுனியண்ண வெடிப்பொலிகளாக உச்சரிக்கப்பட்டன. ‘ஓரசைச் சொல்லின் ஈற்றில் உள்ள ஏகாரம் எகரமாக உச்சரிக்கப்படுகிறது; ‘ea’ என எழுதப்படுகிறது. (சான்று : teak) ‘ea’ என்பது பின்னர் - ‘iy’ - என உச்சரிக்கப்படுகிறது.

ie > tea

பினவருவது போன்ற மாற்றங்களுக்கு இவ்விதி பயன்படுகிறது.

tekku (தேக்கு) > teak

ஆங்கிலத்தில் எகரம் மொழிக்கு இறுதியில் வராது. எனவே தமிழ் எகரம் இகரமாகிறது. இகரம் ‘ய்’ (y) என ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது.

Pillai (பிள்ளை) > Pille > Poly

19 ஆம் நூற்றாண்டில். ‘a ~ aw’ என்பதற்குப் பின்னர் வரும் மொழியிறுதி எகரம் ‘ey’ எனவும் குறிக்கப்படுகிறது. (key என்னும் ஆங்கிலச் சொல்லைக் காண்க)

tannir (தண்ணீர்) ~ tanni > tawney
kanni
(காணி) Cawney