|
8.
தொல்காப்பியம், 1503, 1510, 1513, 1523
“அவற்றுள்
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை”.
“பிள்ளைப் பெயரும்
பிழைப்பு ஆண்டில்லை
கொள்ளுங் காலை நாய்
அலங்கடையே”.
“மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன
அப்பாலான”.
“பிள்ளை குழவி கன்றே
போத்தெனக்
கொள்ளவும் அமையும்
ஒரறி உயிர்க்கே”.
9.
தொல்காப்பியம், 1006
“. . .வருதார் தாங்கல்
வாள் வாய்த்துக் கவிழ்தல்
என்று இருவகைப் பட்ட
பிள்ளை நிலையும். . .”
10.
தொல்காப்பியம், 2, 130. . .
“எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப
சார்ந்துவரல் மரபின்
மூன்றலங் கடையே”.
“மென்மையும் இடைமையும்
வரூஉங் காலை
இன்மை வேண்டும்
என்மனார் புலவர்”. |