பக்கம் எண் :

அத
 

தமிழ் மொழி வரலாறு

85

அதாவது எகரமும் அகரமும் இச்சூழலில் எகரமாக ஒன்றாகின்றன. இவற்றில் அகரம் எகரமாக இடையண்ண ஒலியாக்கப்படுகிறது எனலாம்.

உ, ஊ, ஒ, ஓ ஆகிய இதழுயிர்களுடன் வகர மெய் மொழி முதலில் வராது.37 பிற கட்டுப்பாடுகளை அட்டவணையில் காணலாம்.

3. 2 உயிர்கள்

மூலத்திராவிட மொழியிலும் குகைக் கல்வெட்டு மொழியிலும் உள்ளது போலவே இங்கும் ஐந்து உயிரொலியன்களே உள்ளன. அவற்றின் நீட்சி இங்கும் ஒலியன் தன்மையதாகவே உள்ளது.

உயிர்கட்கு வேற்றுநிலை வழக்குகள் வருமாறு :

இரு 1336
னுரு 260
அரு 1017
சூரு 1017
ளுரு 139
இன்று 1054
ஈன்று 858
என 7
ஏன 66
அசை 1141
ஆசை 1053
ஒத்து 994
ஓத்து 1426
உடல் 1006
ஊடல் 960

 

 

 

 

 

 

 

 


 

உயிர்த்தொடர்கள் ( Diphthongs)

தொல்காப்பியர் காலத்தமிழில் ஐ, ஒள ஆகிய உயிர்த்தொடர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்ததாகக் கருத வேண்டியுள்ளது.


37. தொல்காப்பியம், 63

  “உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர்
 வ என் எழுத்தோடு வருதலில்லை”.