பக்கம் எண் :

409

Tamil Virtual University

3

மணப்பாட்டுத் திருநாள் வருகுதடி
மதினியை ஒரு சத்தம் போடாதடி
கோட்டாத்துத் திருநாள் வருகுதடி
கொழுந்தியை ஒரு சத்தம் போடாதடி
வாடை முந்தும் கோடை முந்தும்
மாசி மாதம் கொண்டல் முந்தும்
காத்தடிச்சிக் கடல் கலங்கும்
கல்லு போட்டாத் தலை உடையும்
ஓடும் கடல் தனக்கு
உடையவளே எந்தனுக்கு
உல்லன் தட்டிப் பாயுதடி
ஓடப் படிகரை மடியை
உண்ணாமல் திண்ணாமல்
ஊர்ப்பயணம் போகாதடி
ஆளை எண்ணிப்படி போடம்மா
ஆரோக்கிய மாதாவே

4

அல்லாவோட காவலுல
ஆபத் தொன்றும் வாராம
பெரிய உந்தன் காவலுல
பேதகங்கள் வாராம
மரியே உன் காவலுல
மனதிரக்கம் வைப்பாயே
காப்பாத்த வேணுமம்மா
கன்னிமரித்தாயே நீ
பாவிக்கிரங்கும் பரிசுத்த மாதாவே
மாதாவே என்றால் மலையும் இளகுமம்மா
கர்த்தரே என்றால் கல்லும் இளகுமம்மா
கல்லும் மலையும் கரம்பக் கயிறாமோ
வில்லோ சரணமம்மா வேந்தன் மகனார்க்கு