இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின்
பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம்.
மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.
|
உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம்
கொண்டு வருவானோ? |
தனது அண்ணன் தம்பிமார்களை
ஏற்றிப் போற்றுவதும், கேலி செய்து மகிழ்வதும், தமிழ்ப் பெண்களின் தாலாட்டு மரபு,
பாமரர் தாலாட்டில் தொட்டில்
செய்த தச்சனையும் காப்புச் செய்து தந்த தட்டானையும் இன்னும் இவர் போன்ற பிற தொழிலாளர்களையும்
பாராட்டிப் பாடும் வழக்கமும் உள்ளது.
அது போலவே பூக்கொண்டுவரும்
பண்டாரமும், போற்றுதலுக்கு உரியனாவான்,
தாலாட்டுகளில் உறவினர்
முறையை உறுதிப்படுத்திக் கொள்ளும் சடங்கு அன்று ஒவ்வொருவரும் குழந்தைக்கு அளிக்கும் பரிசுகள்
வரிசையாகக் கூறப்படும்,
|