பக்கம் எண் :

70

Tamil Virtual University

 

மார்கழி மாசத்திலேதான்-கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே

தைப் பொங்கல் காலத்திலே-கண்ணே நீ
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே-கண்ணே நீ
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே-கண்ணே நீ
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே-கண்ணே நீ
சீர் வரிசை வாங்கையிலே,
வைகாசி மாசத்திலே-கண்ணே நீ
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே-கண்ணே நீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில்-கண்ணே நீ
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே-நீ
அப்பன் வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும்-கண்ணே
கடவுளுக்குக் கையெடடி.

தாயின் குடும்பம் எத்தொழிலைச் செய்து வாழ்கிறதோ அத்தொழில் தாலாட்டில் பெருமையாகக் கூறப்படுகிறது. மீனவர் குலத்தைச் சேர்ந்த தாய் மீன் பிடித்து, விற்றதைப் பற்றியும், விற்ற பணத்தில் அரைமூடி செய்ததைப் பற்றியும் பாடுகிறாள்.