145. |
நாவலந்
தீவு தன்னுள் நன்கயி ராவ தத்தின் |
|
மேவுமின் முகில்சூழ் மாட வீதசோ கப்பு ரத்துக் |
|
காவிநன் விழிமா தற்குக் காமன்விக் கிரம ராசன் |
|
தாவில் சீர் வணிகன் நாமந் தனதத்த னென்ப தாமே. |
இந்
நாவலந்தீவில் ஐராவதச் சேத்திரத்து ஆரிய கண்டத்திலே மின் தவழும் மேகக் குழாஞ்
சூழ்ந்த மாடங்களையுடைய வீதசோக புரத்து அரசன் விக்கிரமன். நீலோற்பலம்போலும்
விழிகளையுடையாள் அக் காமன் தேவி. அந் நகரிலே புகழ்மிக்க வணிகன் தனதத்தன் என்பானாகும்.
(1)
146. |
மனைவிதன்
றனதத் தைக்கு மகனாக தத்த னாகும் |
|
வனைமலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் றேவிப் |
|
புனைமலர்க் கோதை நல்லாட் பொற்புடை வசும திக்கு |
|
மனையினன் மகடன் னாம மியன்நாக வசுவென் பாளம். |
அவன்
மனைவி தனதத்தை. இவர்கட்கு மகன் நாகதத்தன். அந் நகரத்து மற்றொரு வணிகன் வசுதத்தன்.
அழகிய வெற்றிமாலை சூடிய வேற்படையாளன். நன்மணமாலை அணிந்த அழகுடைய நல்லாள் வசுமதி
அவன் தேவி. இவர்கட்குப் புத்திரி நாகவசு எனப்படுவாள்.
(2)
147. |
நண்புறு
நாக தத்த னாகநல் வசுவென் பாளை |
|
யன்புறு வேள்வி தன்னா லவளுடன் புணர்ந்து சென்றான் |
|
பண்புறு நற்ற வத்தின் பரமுனி தத்த நாமர் |
|
இன்புறும் புறத்தின் வந்தா ரிறைவனா லையத்தி னுள்ளே. |
நண்புமிக்க
நாகதத்தன் நற்குணம் மிக்க நாகவசு என்பவளை அன்புமிக்க வேள்வி விதியால் மணஞ்செய்து
அவளுடன் இனிது
|