நாககுமாரன்
வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள் அளித்தலும்,
தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி
யாக்குதலும்
159. |
வேந்தனர்த்த
ராச்சியம் வியாளனுக் களித்தான் |
|
ஆய்ந்தபல தோழர்களுக் கவனிக ளளித்துக் |
|
சேர்ந்ததன் மனைவியருள் செயலக் கணைதன்னை |
|
வாய்ந்தமகா தேவிபட்டம் வன்மைபெற வைத்தான். |
நாககுமாரனும்
பாதி இராச்சியத்தை வியாளனுக்குக் கொடுத்தான். ஏனைய பல தோழர்களுக்கு அவரவர்
தகுதிக்கு ஏற்பப் பல தேயங்களை உரிமையாக்கினான். தான் மணந்த மங்கையருள் இலக்கணைக்கு
மாதேவிப் பட்டங் கொடுத்துத் தலைமையாக்கினான். (15)
இலக்கணையார்
வயிற்றில் புதல்வன் பிறத்தல்
160. |
இலக்கணையார்
தன்வயிற்றி னற்சுதன் பிறந்தான் |
|
மிக்கவன்ற னாமமு மிகுதேவ குமாரன் |
|
தொக்ககலை சிலையியிற் பயின்றுமிகு தொல்தேர் |
|
ஒக்கமிக் களிறுடனே வூர்ந்துதினஞ் சென்றான். |
இலக்கணையார்
வயிற்றில் ஓர் நல்ல ஆண்மகன் பிறந்து நலமுற்றிருந்தான். அழகுமிக்க அவனுடைய திருநாமம்
தேவகுமாரன் என்பதாகும். அவன் அரசர்க்குரிய கலை, சிலை, வேல் முதலியவற்றைக் கற்றுப்
பயின்றும் யானை, குதிரை, தேர் ஏறி ஊர்ந்தும் களிப்புற்றுத் தினமும் செல்லும் நாளில்-
(16)
நாககுமாரன்
மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்
161. |
புரிசையெழ
நிலத்தின்மிசை பொற்புற விளங்கும் |
|
அரியவரி யாசனத்தி லண்ணல் மிகஏறி |
|
எரிபொன்முடி மன்னர்களெண் ணாயிரவர் சூழ |
|
இருகவரி வீசவினி யெழில்பெற விருந்தான். |
பெருமை
சிறந்த நாககுமாரன் மகாமண்டலேசுவரனாய் எழுமதில் சூழ்ந்த நிலத்திலே அழகாக விளங்கும்
செயற்கரிய சிம்மாசனத்தின் ஏறி ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற பொன்முடி மன்னர்
எண்ணாயிரம்பேர் தன்னைப் புடைசூழ இருமருங்கும் கவரிவீச, இனிது அழகுபெற 108 ஆண்டுகள்
செங்கோலோச்சியிருந்தான். (17)
|