(2) பணி அணிந்தாய் - அச்சுறுத்தும்
பாம்பினை அணிகலன்களாக அணிந்தாய், அதை அந்தப் பாம்பினை, விற் பற்றி -
மேருமலையை வில்லாகக் கையில் பற்றி, கயிறாக - அவ் வில்லை வளைத்தற்கு நாணாக,
இசைத்தாய் - அமைத்துக் கொண்டாய். மந்தரத்தே - மந்தரமலையை , (மந்தரமலையை
மத்தாகக் கொண்டு பாற் கடலைக் கடைய அந்த மத்தில்) திணியவைத்தாய் - கயிறாகச்
சுற்றிக் கொள்ளச் செய்தாய். இவையெல்லாம் செய்த உனக்கு, நஞ்சுணவும் - (அப்பாம்பு)
கக்கிய நஞ்சை உணவாகக் கொள்ளுதலும், சிறப்பாமோ-நினக்குச் சிறப்புடையதாகுமோ?
அந்தப்
பாம்பு நஞ்சு கக்கியதால் சூழ இருந்த வானவர் ஓடினர். நீ நஞ்சை உட்கொண்டனை: நஞ்சினைத்
தரும் பாம்பினையே நீ விரும்பியபடியெல்லாம் ஆண்ட நினக்கு அது கக்கிய நஞ்சினை உட்கொள்ளல்
எளிதே.
உணவும்
- உண்ணுதலும்: தொழிற்பெயர் உம்மை யேற்று நின்றது.
ஓகாரம்
வினாவோடு எதிர்மறை.
(3) மால் - திருமால் ஆனவர், உலகங் காக்க - உலகத்தைக் காக்கும்படி, நரமடங்கல்
- (இரணியன் பொருட்டு) நரசிங்கமாக உருக்கொள - வடிவங்கொள்ள, அம்மாலால் - (பிறகு)
அத்திருமாலால், உலகுக்கு - உலகத்திற்கு, ஆன துயர் - உண்டாகிய துயரத்தை, அகற்ற வல்லார்
- நீக்க வல்லவர்கள், வேறு உளரோ - நின்னையன்றி வேறு இருக்கின்றனரோ? (இல்லையன்றே)
நரமடங்கல்
- நரசிங்கம்: நரசிங்கமூர்த்தி இரணியனைக் கொன்று அவன் குருதியை உண்டமையால் வெறிகொள்ள,
அதனால் உலகத்திற்கு நிகழ்ந்த துயரத்தை நீக்க நின்னை யன்றி வேறு யார் உளர்?
(4)
மகிழிருந்தாய் - மகிழ்ச்சியோ டிருந்தவனே, மனை என்றோ - மனைவி என்று கருதியோ,
மாசுணம் - பாம்பாகிய ஆதிசேடன் மீது, துயின்றானுக்கு - பள்ளிகொண்ட திருமாலுக்கு
அகங்கனிய - மனம் குழையும்படி, சங்கு ஆழி-சங்கும் சக்கரமும், ஆண்தகை - ஆண் தன்மையை
உடையவனே, முன் அருளியது - முன் கொடுத்தது. (மனைவி-சக்தி) [சங்கு சக்கு? (கண்). திருமால்,
தன் கண்ணைப் பிடுங்கிச் சிவனை அருச்சித்தபோது சிவபிரான் சக்கரம் அளித்தனர்.
இது நிகழ்ந்த தலம் திருவீழிமிழலையாகும். சங்கு-சக்கின் பொருட்டு.]
தேவாரம்.
திருவீழி
மிழலையில் தன்னை அருச்சித்த திருமாலுக்குச் சக்கரம் அளித்தான் என்பதே வரலாறாக,
சங்கும் அளித்தான் என்றது, தன்னை அருச்சித்தற்குப் பிடுங்கிய கண்ணாகிய சக்கு (சக்ஷு-கண்)
வினையும் மீண்டு அளித்துக் காப்பாற்றினான் என்றவாறு.
மகிழிருந்தாய்
என்றதும் மகிழமரத்தின் கீழ் இருந்தவரே என்றும் பொருள்படும். இது சுந்தரர் பொருட்டு
நிகிழ்ந்தது.
மகிழ்,
மகிழ்ச்சி என்ற பொருளில் முதனிலைத் தொழிற் பெயர்.
|