(2) கூற்றினை - எமனை, குமைத்திடு - உதைத்துக் கொன்றிட்ட, கோலம் - அழகிய, தாளினை
- தாளை உடையாய், (நீ அந்தத் தாளினால்) அருள்நடம் - அருள் செய்யும் நடனத்தை,
ஆடும் பான்மையை - ஆடும் தன்மையை, ஆற்றினை - செய்தாய்.
கூற்று
என்றது எமனை. சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை. “காலம் உலகம் உயிரே உடம்பே”
என்பது தொல்காப்பியம். உடலையும் உயிரையும் கூறு (வேறு) படுத்தலால் எமன், கூற்று எனப்
பட்டான்: காரணப்பெயர். குமைத்தல் - உதைத்து அழித்தல். கோலம் - அழகு. உயிர்களை
அழிக்கும் எமனை அழிக்கும் தாளையுடைய நீ அந்தத் தாளினால் அருள் செய்யும் நடனம்
ஆடும் தன்மையைச் செய்தாய். குமைத்திடு ஆற்றினை - அழித்தல் செய்யும் ஆற்றலை உடையை.
தாளினை - முன்னிலை வினைமுற்று. தாளினை - தாளை உடைய நீ என முன்னிலை வினையாலணையும்
பெயராகக் கொண்டு, தாளினை, நடமாடும் பான்மையை ஆற்றினை என முடித்தலுமாம்.
நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்.
ஈரேழ்
புவனம் பரிந்து ணேற்றினை. |
1 |
காரூர் சடையிற் கரக்கு மாற்றினை |
2
|
பாரார்
பெரியோர் பணியுஞ் சாற்றினை. |
3 |
தேரார் தெளிவறு செருக்கை மாற்றினை. |
4
|
|
|
(இ-ள்.)
(1) ஈர் ஏழ் புவனம் - பதினான்கு உலகமும், பரிந்து (பிரளயத்தில்) விரும்பி, உண்
ஏற்றினை - உட்கொண்ட திருமாலாகிய இடபத்தினை உடையை.
(2)
காரூர் - மேகம் தங்கிய, சடையில் - சடையினிடத்து, கரக்கும் - அடக்கிய, ஆற்றினை
- கங்கையை உடையை.
திரு
ஆலவாயைப் பெருமழை பொழிந்து அழிக்க வந்த மேகங்களைச் சிவபெருமானார் சடையில் அடக்கிக்
கொண்டனராதலின், ‘காரூர் சடை’ என்றார். கார் மேகத்திற்குப் பண்பாகுபெயர்.
சடையில் மறைக்கும் கங்கையை உடையை.
(3)
பாரார் - உலகத்திற் பொருந்திய, பெரியோர் - ஆன்றோர்கள், பணியும் - வணங்கிக்
கூறும், சாற்றினை - துதிகளை உடையை. சாற்றினை - சாற்றுதல்களை உடையாய்; சாற்று -
துதி, முதனிலைத் தொழிற்பெயர்.
(4) தேரார் - பகைவரது, தெளிவறு - தெளிவற்ற, செருக்கை - இறுமாப்பை, மாற்றினை -
ஒழித்தாய். தேரார் - பகைவர்; ஈண்டுப் பாணாசுரர் முதலியோர்.
|