பக்கம் எண் :

28

Kachchik Kalambagam

முச்சீர் ஓரடி அம்போதரங்கம் - 8

புரமெரி படநகை கொண்டனை
1
புரிதவ றழிவகை கண்டனை
2
புரையறு தசைமிகை உண்டனை
3
புணர்வுற வருமறை விண்டனை
4
மணிமிட றார்தரும் இருளினை
5
மலைவளர் காதலி மருளினை
6
மறையொளிர் தோமறு பொருளினை
7
மகிழொடு மாவமர் அருளினை

8

(இ-ள்.) (1) புரம் - திரிபுரம். எரிபட - தீப்பட, நகை கொண்டனை - புன் முறுவல் செய்தனை.
புரம் - திரிபுரம்: முன் மொழிகெட்ட பின்மொழி நிலையல்.

(2) புரிதவறு - (திரிபுரத்தார்) செய்த தவறு, அழிவகை - அழியும்படி, கண்டனை - உண்டாக்கினை.

புரி தவறு - வினைத்தொகை.

(3) புரையறு - குற்றமற்ற, தசை - (கண்ணப்பர் படைத்த) இறைச்சியை, மிகை - மிகுதியாக, உண்டனை - உண்டாய்.

(4) புணர்வுற - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்று நான்காகக் கலந்து கிடக்க.

அருமறை - அரிய வேதங்களை. விண்டனை - வெளியிட்டனை. (தெளிவுபடுத்தினை)

வியாசர் நான்காகப் பிரித்ததற்குமுன் எல்லாம் ஒருங்கே யிருந்தனவாதலால் ‘புணர்மறை’என்றார்.

(5) மணிமிடறு - அழகிய கழுத்தில், ஆர்தரும் - பொருந்திய, இருளினை - நஞ்சினது இருள் நிறம் உடையை.

மணிமிடறு - நீலமணி போலும் மிடறு எனினுமாம். ஆர்தரும் - பொருந்திய; ஆர்தா பகுதி.

இருள் பண்பாகுபெயராய் விடம் எனினும் அமையும்.
‘மணிமிடற் றெண்கையாய் கேளினி’ என்பது கலித்தொகை.

(6) மலைவளர் - மலையரையன் பெற்று வளர்க்கின்ற, காதலி - மகளாகிய பார்வதியிடத்து, மருளினை - காதல் மயக்கம் கொண்டனை.

(7)மறையொளிர் - வேதத்தில் விளங்குகின்ற, தோம்அறு - குற்றமற்ற, பொருளினை - பொருளையுடையை. (மறை - நான்குவேதம்) அவையாவன. ருக், எசூர், சாமம், அதர்வணம் என்பன.

(8) மகிழொடு - மகிழ்ச்சியுடன், மா - மாமரத்தின் அடியில், அமர் - தங்கிய, அருளினை - அருளை உடையை.

இரட்டுற மொழிதலால்,

மகிழொடு - ஒற்றியூரில் மகிழமரத்தின் அடியிலும், மா - காஞ்சியில் மாமரத்தின் அடியிலும் தங்கியவர் எனினும் அமையும்.


Untitled Document