| 114 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
(வி-ரை.)
தாழ்ந்த வேணியர் - நீண்டநாள் வளர்க்கப்
பெற்றதாதலின்
தாழ்ந்தது. தாழ்ந்த - விரும்பிய என்று பொருள்கொண்டு
தாம் விரும்பிய
என்றும், பிறர்க்கு விருப்பத்தை விளைவிக்கின்ற என்றும் பொருள் கூறலும்
ஒன்று. 52-ம் பாட்டின்கீழ் உரையிற் காண்க.
வேணி -
சடை; சைவத்திற்கே சிறப்பாக உள்ள அடையாளங்களில்
ஒன்று. “சைவம் விட்டிட்ட சடை“ என்பது திருவிசைப்பா. மும்மையா
லுலகாண்ட மூர்த்தி நாயனார் புராணமும் காண்க. சடையான் என்பது
சிவபெருமானுக்கே உரிய பெயராம்.
தாழ்ந்த வேணியர் சைவர்
- நீண்ட சடை கொண்டவர்களாகியதொரு
வகையினரும், பிறரும், ஆகிய சைவர்கள் - காபாலியர் - பாசுபதர் முதலிய
பலவேடங்களையுடைய சைவர். சிறுத்தொண்ட நாயனாருக்கு அருள்புரியப்
பெருமான் கொண்டருளியது காபாலிச் சைவ வேடம். இதனைப் புராணத்துக்
காண்க. “... பம்புசடைத் திருமுனிவர் காபாலக்கையர் பலவேடச் சைவர் ...“
திருஞா - புராணம் - 1018.
தபோதனர் - தவத்தையே தனமாகவுடையவர்.
அன்மொழித் தொகை;
வடநூன் முடிபு. தனம் - செல்வம். தவம்
- சரியையாதி சிவபூசை. இது
முன்னரே விரிக்கப்பெற்றது.
வாழ்ந்த சிந்தை முனிவர்
- முனிவர் - மனனசீலத்தை உடையவர்.
தமக்கென வாழாது பிறர்க்கெனவே வாழ்ந்த - என்று முரைப்பர்.
வீழ்ந்த இன்பத் துறையில் விரவுவார் - வீழ்தல்
- விரும்புதல். “தாம்
வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல்“ என்ற குறளில், “வீழ்வார்“
என்பதற்கு விரும்புவார் - என ஆசிரியர் பரிமேலழகியர் பொருளுரைத்தமை
நோக்குக. இவ்விருப்பங்கள் பெரும்பான்மை மக்களை வீழ்த்துவன எனும்
குறிப்பும் பெற இன்பத்துறைக்கு வீழ்ந்த என்ற எச்சம் கொடுத்துக் கூறினார்.
ஆனால் இங்கு உள்ளாரை அவ்விருப்பங்கள் வீழ்த்தாது உயர்த்துவனவேயாம்
என்று குறிக்கத் தபோதனர்; முனிவர், மறையவர் முதலிய வகையினருடன்
கூட்டிக் கூறினார் என்னை? இன்பத் துறையில் விரவுவாராயினும் தபோதனர்
- முனிவர் - மறையோர்களது தன்மை கொண்டு வாழ்வார்கள் என்ற
காரணத்தாலென்க.
“......
ஐந்து புலன்களு மார வார்ந்தும்
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந் தோங்கி
இவ்வகை யிருந்தோ மாயினு மவ்வகை
மந்திர வெழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழிச் செலுத்தலி னந்த
முத்தியு மிழந்திலம் முதல்வ! ......“
-
பதினோராந்திருமுறை. |
என்று இக்கருத்துக்களைப்
பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக்
கோவையில் 19-வது திருப்பாட்டில் எடுத்துக் காட்டியிருப்பது இங்கு வைத்துக்
காணத்தக்கது. மேலும் திருவாரூர்ப் பிறந்தார்கள் யாவரும், பிறந்த
அக்காரணம் பற்றியே, முத்தி பெறும் தகுதியுடையராதலின், அத்திருநகரிலே
முயன்று தவங்கிடந்து முத்தி பெறும் முனிவர் மறையோர் முதலிய
கூட்டத்துடன் இவர்களையும் கூட்டி உரைத்தனர் என்பதுமாம். வேணியர்
என்பது துறவிகளையும், சைவர், தபோதனர் என்பது சிவதீக்கை பெற்றுச்
சிவபூசை செய்யும் பல ஆச்சிரமங்களிலுமுள்ள சைவர் - ஆதிசைவர் என்ற
முனிவர்களையும், முனிவர் என்பது எல்லா வருணத்துள்ளும் மனனசீல
வாழ்வுடையோரையும், மறையோர் - மகா சைவராகிய வேதியரையும்,
விரவுவார் - அரசவீதியிலும் கோயிற்சுற்று விழாவீதியிலும் இருக்கத்தக்க
ஏனைய எல்லா இல்வாழ்வார்களையும் குறிக்கும் என்றும் கூறுவர்.
|
|
|
|