| “கறவை
முறை செய் காவலன்“ -
சிலப், வழக்கு, 29. |
| “மகனை
முறை செய்த மன்னன்“
- மணிமேகலை. |
முதலியவை காண்க. நம்
முன்னோர் நீதிமுறையில் வைத்த உயர்ந்த நோக்கம்
இதில் விளங்குவதாம். சைவசாத்திரங்களும் இதனை எடுத்துப்பாராட்டியுள்ளன.
மனு வேந்தனுக்குப் பெரியபுராணம் தோற்றுவதற்குக்
காரணமாய்
இருந்தது அநபாயரது தருமமும் - நீதியும் - சால்புமே யாதலின் அவர்க்கு
வழிமுதல்வராய் நீதி போற்றிய மனுச்சோழர் செய்தியை ‘மன்னு சீரநபாயன்
வழிமுதல்“ என்று போற்றினார் ஆசிரியர். ஆரூர்ப் பெருமான்
எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்ததுவேமனுச்சோழர் நீதிக்குக்காரணமாம்.
அதுவே வழிமுதலாய் அநபாயர் நீதிக்குக் காரணமாயிற்று. அதுவே
பெரியபுராணத்துக்குக் காரணமாயிற்று. ஆதலின் திருவாரூர்ச் சிறப்பும் அங்கு
இறைவன் அருட் செயல்களும் பலப்பல வாயினும் இதனை இப்பகுதியிலே
சிறப்பாய் விதந்து எடுத்து ஓதிப் பிறவற்றை உய்த்துரை வைத்தார் ஆசிரியர்.
49
| 135.
|
இனையவகை
யறநெறியி லெண்ணிறந்தோர்க்
கருள்
புரிந்து |
|
| |
முனைவரவர்
மகிழ்ந்தருளப் பெற்றுடைய
மூதூர்மேற்
புனையுமுரை நம்மளவிற் புகலலாந்
தகைமையதோ?
அனையதனுக் ககமலரா மறவனார் பூங்கோயில். |
50 |
(இ-ள்.)
இனையவகை...தகைமையதோ? - இவ்வாறு அறநெறியிலே
அளவிலாத உயிர்களுக்கு அருள்செய்து யார்க்கும் முன்னவனாகிய
வீதிவிடங்கப் பெருமான் எழுந்தருளி வீற்றிருந்தருளும் பழமையாகிய
அந்நகரத்தைப்பற்றி எடுத்துச் சொல்வது நமது அளவுபட்ட சொல்லாற்றலில்
அடங்குமா? அடங்காது; அனையதனுக்கு... பூங்கோயில் - அந்நகரினுக்கு
அகமலர் போல் விளங்குவது அறவனாராகிய இறைவன் எழுந்தருளிய
பூங்கோயில் என்னும் திருக்கோயிலாம்.
(வி-ரை.)
அறநெறியில் - அறநெறியில் நின்று உய்யுமாறு
என்க.
இங்கு அறம் எல்லா அறங்களையும் உள்ளிட்டது. இறைவன் இங்கே
அரசராக (தியாகராசர்) எழுந்தருளி யிருத்தலால் அரசனாவான்
அறங்காப்பான் அல்லனோ - என்று நாம் அறிந்தபடி (36-வது திருப்பாட்டு)
இறைவரும் அறநெறியில் அருள் புரிந்து மகிழ்ந்து வீற்றிருக்கின்றார்
என்றதாம். நீதியே இறைவன் திரு உருவங்களில் ஒன்றாதல்முன்னரே
குறிக்கப்பட்டது. ‘அறவாழி அந்தணன்' என்றகுறளும், ‘அறவனாரடி சென்று
சேர்வதற்கு' என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் காண்க. இதுபற்றி
இப்பாட்டில் அறவனார் பூங்கோயில் என்றும் கூறினார்.
எண்ணிறந்தோர்க்கருள் - உயிர்கள்
பல வாதலால்
எண்ணிறந்தோர்க்கு என்றார். அவ்வுயிர்கள் தோறும், அவ்வவற்றின்
உயிர்க்குயிராய் அங்கங்கே, நின்று இறைவன் செய்யும் அருளும் பலவாதலின்
எண்ணிறந்த உயிர்க்கு எண்ணிறந்த அருள் என்க. முனைவர் எல்லார்க்கும்
முன்னவர். முன்னர் 47-வது திருப்பாட்டில் ‘முன்னவனே' என்றதும் இது
இதன் உரை அங்குக் காண்க. “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் -
முனைவன்“ என்றபடி இவரது இலக்கணத்தை இலக்கணத்துட் காண்க.
மகிழ்ந் தருளப் பெற்றுடைய
மூதூர் - மகிழ்ச்சியுடன் இனிது
வீற்றிருக்கப் பெற்ற பெருமையுடையது. சிலநாள் திருப்பாற் கடலிலும், சிலநாட்
பொன்னுலகத்திலும் எழுந்தருளியிருந்த இத் தியாகேசர் இம்மண்ணுலகத்திலே
இந்நகரை விரும்பி நிலைத்து எழுந்தருளியிருக்கின்றாராதலின் இவ்வாறு
கூறினார். ‘தொன்மையின் மிக்கது' என்று தோற்றுவாய்செய்த பொருளையே
முடித்துக்காட்டி மூதூர் என்றதுமாம்.
|