பக்கம் எண் :


432 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

எச்சவும்மைகள் எண்ணும்மைகளுமாகி நின்றன. இங்கு நடு என்றது திதி
கருத்தா என்க. ஆதியாய் நடுவும் ஆகி - உலகச்சிருட்டி திதி சங்கார
மூன்றும் இத்தில்லைத் திருநடனத்திலே ஆவன என்பது. திரோபவ
அனுக்கிரகங்கள் இவற்றுள்ளே அடங்குவன. எனவே இந்நடம் ஐந்தொழில்
நடனம் என்பதை உபயோகித்தருளியபடி.

     அளவிலா அளவும் ஆகி ஆன்ம சிற்சக்தியே அளவை யெனப்படும்
பிரமாணம்; ஏனையவை பிரமேயமாகிய பொருள்கள். இவை பவுட்கரத்தும்
சிவஞானபாடியத்தும் விளக்கப்பட்டன. இங்கு அளவு என்னுந் தொழிற்
பெயரிரண்டும் ஆகுபெயர். பசு பாச ஞானங்களாகிய சுட்டுணர்வால்
அறியப்படும் பொருளும், எவ்வாற்றாலும் அறியப்படாத பொருளும்
அசத்தாம். ஆதலின் சிவஞானங் காட்டக் காணும் ஆன்ம சிற்சத்தியாகிய
அளவையால் பரம்பொருள் அறிந்தநுபவிக்கப்படும் பொருளேயாம்.

     சோதியாய் உணர்வும் ஆகி - சோதி - காட்டும் புற ஒளி;
உணர்வு - அவ்வாறு காட்டப்பெற்றுக் காணும் உயிருணர்வு.

     தோன்றிய பொருளும் ஆகி அவ்வாறுணர்த்த உணரும் அறிவினால்
உணரப்பெறும் பொருட் பிரபஞ்சமெல்லாம் தானே வியாபித்து நின்று.

“அறிகின்ற, மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா                                    ராகாச
மப்பொருளுந் தானே யவன்“

                 - அற்புதத் திருவந்தாதி - 20

     என்ற காரைக்கால் அம்மையார் திருவாக்கும் காண்க.

     பேதியா ஏகம் ஆகி - தோன்றிய பொருள்களினுட் பேதமற
அத்துவிதமாய்க் கலந்து நின்றதொரு பொருள் ஆகி. சொற்பிரபஞ்சம் -
பொருட் பிரபஞ்சம் என்ற இருவகை உலகமும். அதாவது “உரையின்
வரையும் பொருளின் அளவு, மிருவகைப்பட்ட வெல்லையும்“
(கோயினான் - 4). சுத்த அசுத்த மாயைகளினின்று தோற்றுவிக்கும்
இறைவன் தான் அவற்றோடு அன்னியமின்றிக் கலந்து நிற்கும் நிலையை
இங்குக் குறித்தபடி.

     பெண்ணுமாய் ஆணும் ஆகி - சத்தியும் சிவமுமாய் உலகெலா
நிறைந்துநிற்கும் தன்மை. இவ்வாறு இறைவன் தன்னுள்ளே சத்தி சிவமென
இருவேறு வகைப்பட்ட தன்மைகள் வைத்தலாலே தான், பல்வேறு
வகைப்பட்ட உயிர் வடிவங்களெல்லாம் குறியாலும் குணத்தாலும் ஆண்
பெண் எனப் பேர்பெற்று அந்தந்த யோனிக்குள்ளே இருவேறுவகையா
யடங்கித் தம்முட் கூடிக் களித்து வாழ்கின்றன. “அச்செலாம் இலிங்காங்க
பகாங்கமாம்படி சிவமும் சத்தியும் கொண்டருளிய பீட்விலிங்க வடிவமே
அங்கனம் இருவேறு வகைப்பட வைத்ததனைக் கண் கூடாக
அறியச்செய்தல் சான்று“ என்று எமது மாதவச் சிவஞான முனிவர்
உரைத்தமை காண்க.

 “சத்தியுஞ் சிவமுமாஞ் சரிதைப், பன்மையோகிகள்
  யாவையும் பயில்வன“

                         - திருநா - புரா - 374

சத்தியும் சிவமு மாய தன்மையில் வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா வாணும் பெண்ணு முணர்குண குணியுமாகி
வைத்தன னவளால் வந்த வாக்கமிவ் வாழ்க்கை
                                     யெல்லாம்
இத்ததையு மறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார்.

             சிவஞான சித்தியார். (1-ம் சூத்திரம் - 69)

     இதனையே “தொன்மைக் கோலம்“ என்றருளியது திருவாசகம்.
(திருக் - கோத்தும்பி - 18).

     போதியா நிற்கும - போதித்து நிற்கின்ற. போதித்துக்கொண்டு
இறைவன் என்றும் நித்தியமாய் நிற்கின்ற. மேலே கூறியவாறு
ஆதிமுதலியனவாய் ஆகின்ற தெதற்கு? என்றும், அதன் பயன் யாது?
என்றும், வினவுவாரை நோக்கித் தனது அத்தன்மைகளை உயிர்களுக்கு
உணர்த்தி உய்விக்கும் பொருட்டு நிற்கும் நிலையே