|
னது துதியாகக் கூறினமை
என்னெனில் இவர் தில்லை வாழந்தணர்களில்
ஒருவராயும் அவர்களில் முதல்வராயும் இருக்கும் உண்மைபற்றி என்க.
“நாமிவரி லொருவரெனுந்,
தேவர்க டேவன செல்வம்“
என்று கோயிற்புராணமுடையார் மூவாயிர முனிவர் துதியிற் குறித்துள்ளதும்
காண்க. சோதியின் கழல் என்றியையும். 2
| 352. |
போற்றிநீ
டில்லை வாழந் தணர்திறம் புகல
லுற்றேன்;
|
|
| |
நீற்றினா
னிறைந்த கோல நிருத்தனுக் குரிய
தொண்டாம்
பேற்றினார்; பெருமைக் கெல்லை யாயினார்
பேணி
வாழும்
ஆற்றினார்;பெருகு மன்பா லடித்தவம் புரிந்து
வாழ்வார்;
|
3 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு கூத்தப் பெருமானது கழலைத்
துதித்துக் கொண்டு (அதன் துணையாலே) அவரை முதல்வராக
கொண்டுள்ள வழி வழி நீண்டு வளர்ந்துவரும் தில்லைவாழந்தணர்களின்
தன்மையினைச் சொல்லப் புகுகின்றேன்; இவர்கள் திருநீற்றினாலே நிறைந்த
திருக்கோலத்தை யுடைய கூத்தப்பெருமானுக்கும் உரிமையாகிய
திருத்தொண்டராகும் பேறுபெற்றவர்கள்; எல்லாப் பெருமைகளுக்கு
வரம்பாயுள்ளவர்களும் வழிபட்டு வாழ்தற்கேதுவாகிய ஒழுக்கத்திலே
தலைநின்றவர்கள்; மேன்மேலும் பெருகிவளரும் அன்பினாலே
திருவடியையே பற்றுக்கோடாகக்கொண்டு தவம் செய்து வாழ்வார்கள்;
(வி-ரை.)
போற்றி - அந்தணர்களையே
போற்றி அவர் திறம்
புகலலுற்றேன் என்று கூறுவாருமுண்டு. நீள் தில்லைவாழந்தணர்
-
நடேசரை முதல்வராகவும் தம்மிலொருவராகவும் கொண்டு அன்றுமுத
லின்றுவரை வழிவழி வளர்ந்துவரும் மூவாயிர முனிவர்கள்.
“நாவிரவு
மறையினராய் நாமிவரி லொருவரெனுந்
தேவர்க டேவன செல்வச் செல்வர்களாய்த் திகழ்வேள்வி
பாவுநெறி பலசெய்யும் பான்மையராய் மேன்மையராம்
மூவுலகுந் தொழுமூவா யிரமுனிவ ரடிபோற்றி“ |
என்பது கோயிற் புராணம்.
திறம்
- தன்மை. “இன்ன பண்பு“ (344) என்றுரைத்த பண்பு. பண்டு
மின்றும் என்றும் நீடியிருக்கின்றாராதலின் ஒவ்வொருவர்க்கும் வரலாறு
கூறாது அவர்களின் பொதுப்பண்பு மட்டும் உரைக்கலாகும் என
அதனையே இப்பகுதியிற் கூறுகின்றராதலின் திறம்
என்றார்.
நீற்றினால்
நிறைந்த கோலம் - “பூசுவதும் வெண்ணீறு“ -
(திருவாசகம்). “நீறு சேர்வதோர் மேனியா“ - (தேவாரம்) முதலிய
திருவாக்குக்கள் காண்க.
உரிய தொண்டு ஆம்
பேற்றினார் - அவனுக்கே சிறப்பாய்
உரிய எனவும், தமக்கே சிறப்பாய் உரிய எனவும் இருதிறமும் சிறப்பு
உரிமையாதலின் உரிய எனப் பொதுப்படக் கூறினார். இதனையே தம்
அடியார் என்று முதனூலும், உரிமைத்தொழில்
புரிவோர் என்று
வழிநூலும் பேசினமை காண்க.
தொண்டு ஆம் பேறு
- தொண்டு செய்வதினும் பெரிய பேறு
வேறின்மையால் ஆம்பேறு என்றார். இச்சிறப்புப்பற்றியே திருஞானசம்பந்த
நாயனார் இவர்களைத் தேவாரத்தில் வைத்துத் துதித்ததும் காண்க.
“ஆடுங்கழற்
கணுக்க ராம்பே றதிசயிப்பார்“
-
திருஞான - புரா - 168 |
“நீடு
வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டவந் நிலையெல்லாங்
கூடு மாறுகோத் தவர்தொழு தேத்துசிற் றம்பல மெனக்கூறி“
-
திருஞான - புரா - 174 |
என்ற இடத்துக் கூறப்பெற்றமையும்
கூர்ந்து நோக்குக.
பெருமைக்கு எல்லை
ஆயினார் - பெருமைகளுக்கு வரம்பாய்
நின்ற பெரியோர். பெருமைகளெல்லாம் இவர்களது அளவிலே உட்பட்டு
மேற்செல்ல மாட்டாது.
|