|
தானம்
- சற்பாத்திரமறிந்து செய்தல். அதாவது
சிவஞானிகளிடத்துச் செய்தல்.
அகர
மாயிர மந்தணர்க் கீயிலென்? - சிகர மாயிரஞ்
செய்து
முடிக்கிலென்?,
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு - நிகரிலை யென்பது நிச்சயத்
தானே
-
ஏழாந்தந்திரம் - 157 |
திலமத்
தனையே சிவஞானிக் கீந்தால் - பலமுத்தி சித்திபரபோக
முந்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே
-
இரண்டாந் தந்திரம் - 165 |
முதலிய திருமந்திரங்கள்
காண்க.
தவம்
- சிவபூசை. முன்னர் உரைத்தவை காண்க. தவங்களிற்
சிறந்ததாய்ச் சிவனை நேரே கூட்டுவதால் தவமாவது சிவபூசை என்க.
உற்ற நோய்நோன்றலும் உயிர்க்குறுகண் செய்யாமையுமாம். மிக்கார்
தானம் எனக்கூட்டி (நூல்) வல்லார்கள் உரைத்த பகுதிப்படி தானம்
தவம் சார்ந்தவர் எனக் கூட்டி யுரைத்தனர். மகாலிங்கையர்.
ஊனம்
- குற்றம் - அதனாலாகிய பிறவி. இல்லார் - பிறவி
விதையைத் தானந் தவமாதிகளால் மேல் முளையாது செய்தவர்.
342 பார்க்க.
மானம்
- மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் - குறள்.
என்றபடி உயிர் கொடுத்தும் தமது கொள்கையைத் தவறாது காப்பவர்.
பொறை
- பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
- ஸ்ரீ கயிலாயம் போற்றித் திருத்தாண்டகம் - 5
| 357.
|
செம்மையாற்
றணிந்த சிந்தைத் தெய்வவே தியர்க
ளானார்
|
|
| |
மும்மையா
யிரவர் தாங்கள் போற்றிட முதல்வ
னாரை
இம்மையே பெற்று வாழ்வா;ரினிப்பெறும்
பேறொன்
ரில்லார்;
தம்மையே தமக்கொப் பான நிலைமையாற்
றலைமை
சார்ந்தார்; |
8 |
என்றபடி பூமி பொறையுடைமைக்கு
இலக்கியமாவது.
அகழ்வாரைத்
தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த றலை என்றார் நாயனார். |
மனையறம்
- இல்லறம். இது, இல்லற மல்லது நல்லற மன்று,
முயல்வாரு ளெல்லாந் தலை, புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ
தெவன்,
நோற்பாரி னோன்மை யுடைத்து, வானுறையுந் தெய்வத்துள்
வைக்கப்படும் என்பனவாதி புகழ்களாலே பெரியோர் பாராட்டும்
பண்புடையதாய், நூல்களில் விதித்தபடி ஒழுகும் இல்வாழ்க்கையாம். 7
(இ-ள்.)
வெளிப்படை. செம்மைத் தன்மையின் நிறைவினாலே
ஆணவ நீங்கித் தணிவுபெற்ற சிந்தையுடைய தெய்வத்தன்மை வாய்ந்த
மூவாயிர வேதியர்கள் இம்மையிலேயே இறைவனைத் தாம் போற்றி
வாழும்படிக் கைவசமாகக் கிடைக்கப்பெற்று வாழ்கின்றவர்கள்; ஆதலின்
அவர்கள் இனிப் பெறுவதாய இதனின் மிக்க பேறு வேறில்லாதவா
்களாயினார்; மேற்கூறிய எல்லாவற்றாலும் தமக்கு நிகரானார்
தாமேயல்லாது பிறரில்லை என்ன நிலைபெற்று அந்நிலையிலே
தலைசிறந்தவர்கள்;
(வி-ரை.)
செம்மை - திருநின்ற செம்மை
- சிவத்தன்மை. அதனாற்
றணிந்த சிந்தை சிந்தையிற் சிவத்தன்மை நிறைய நிறைய ஆணவத்தன்மை
வலிகுறைந்துபடும். ஆணவம் வெப்பமிக்கு மேலெழு மியல்புடையதாதலின்
தீயது என்பார் அது வலி குறைந்த நிலையைத் தணிந்த என்றார்.
தணிந்தமனத் திருமுனிவர் தபோவனத்தி னிடைச்சார்ந்தார்
-
கண் - புரா - 140 முதலிய திருவாக்குக்கள் காண்க. செம்மை என்பதற்கு
ஒழுக்கம் என்றும்,
|