|
ஞான்றும் ஒரு படித்தாகவே
துதிக்கும்; பிறர்க்கும் புகட்டும். எனவே,
இது வானவர் பூமழைக்கு மேற்பட்டதாதலின் அடுத்துக் கூறினார்.
ஞான முனிவர் மறை முடிவில்விளங்கும் ஞானச் சுவானுபூதிமான்களாதலின்
அடுத்துக் கூறப்பெற்றனர். மறைகள் சொல்வாரின்றியே வேத வொலிகள்
மிகுந்தன என்க. இது பெருநன்மைகளும் பெரிய அருளிப்பாடுகளும்
நேர்ந்தபோது நிகழ்வது. ஓதுமறை யோர்பிறி துரைத்திடினு மோவா,
வேதமொழி யாலொலி விளங்கியெழு மெங்கும் (31), தரை முதலான,
எங்கணு மியற்றுபவரின்றியு மியம்பும், மங்கல முழக்கொலி மலிந்த மறு
கொல்லாம் (33) என்ற திருஞானசம்பந்த நாயனார் அவதாரத்திற் போந்த
நிகழ்சிகள் காண்க.
ஊனமில் தொண்டர்
- பசுபோத மில்லையாகப்பெற்ற
தொண்டினையுடைய நாயனார். ஊனம் - பசுபோதம்.
ஊனக்கண்
பாசம் - என்ற சிவஞானபோதங் காண்க.
நலமிகு சிவலோகத்தில்
- சிவானந்த போகமே வளர்கின்ற
அபரமுத்தித் தானமாகிய சுத்தபுவனத்திலே நலமே எனப் பிரிநிலை
ஏகாரம் விரித்துரைக்க. கும்பிடுதல் - ஓங்குணர்வி
னுள்ளடங்கி நிற்றல்.
உடனுறைதல் - இரண்டற்று நிற்றல். பெருமை
- பேரின்பம்.
சுற்றத்தாரும் வானிடை
யின்பம் பெற்றார் - வானிடை
யின்பம் - இது வீர சுவர்க்கம் என்பர். நாயனார் (தொண்டர்) பெற்ற
சிவலேகாத்தில் கும்பிட்டு உடனுறை பெருமை என்றது வேறு - இவர்கள்
(சுற்றத்தார்) பெற்ற வானிடையின்பம் வேறு. முன்னையது பேரா
வொழியாப் பிரிவில்லா மறவா நினையா வளவிலா மாளா வின்ப
மாகடலே - (திருவாசகம் - பிரார்த்தனைப் பத்து - 6) என்ற படி
யுள்ளநிலை. சுற்றத்தாரும் - உம்மை இழிவு
சிறப்பு. இறந்தது தழுவியது
என்று முரைப்பர். சுற்றத்தார்களும் வானிடையின்பம் பெறக் காரணம்
அவர்கள் தரும வழியினைப் பற்றி யொழுகியமையாலும், நாயனாரிடத்தும்
அம்மையாரிடத்தும் தம்மிடத்தும் குலப்பழி சாராது காக்கப் பரிவுகொண்
டணைந்தமையாலும், அந்தத் தருமச் செயலிலே தமது உயிரையங்
கொடுக்கத் துணிந்தமையாலும், நாயனார் கையின் தூய வாளினாலே
தண்டிக்கப் பெற்றமையாலும் ஆயிற்று என்க.
| 439.
|
இன்புறு
தாரந் தன்னை யீசனுக் கன்ப ரென்றே
|
|
| |
துன்புறா
துதவு தொண்டர் பெருமையைத்
தொழுது வாழ்த்தி
யன்புறு மனத்தா னாத னடியவர்க் கன்பு நீடு
மன்புக ழிளசை மாறன் வளத்தினை வழுத்த
லுற்றேன்.
|
36 |
(இ-ள்.)
வெளிப்படை. இதுவரைச் சொல்லி வந்தபடி, இன்பமுறும்
தமது மனைவியை இவர் இறைவனடியார் என்ற அடிமைத்திறத்தையே
நினைத்து யாதொரு கவலையுமின்றி இல்லை யென்னாது கொடுத்தளித்த
தொண்டராகிய இயற்பகையாரது தொண்டின் பெருமையைத் தொழுது
வாழ்த்திக்கொண்டு, அதன் துணையாலே, இனி, அன்பு கொண்ட
மனத்தினால் இறைவனடியார்களிடத்திலே அன்பு நிடிய நீலை பெற்ற
புகழுடை இளையான்குடியிலே வந்த மாற நாயனாருடைய அன்பின்
வளத்தைத் துதிக்கத் தொடங்குகின்றேன்.
(வி-ரை.)
இன்புறுதாரத் தன்னை...உதவும்
- இச்சரிதத்தை
முடித்துக் காட்டி மேல் வருஞ் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தவாறு.
403 உரை பார்க்க. அங்ஙனம் முடித்துக் காட்டும் வகையிலே
இச்சரிதத்தின் உள்ளுறை சாரமான தத்துவத்தைச் சுருக்கி எடுத்து
வடித்துக் காட்டிய அழகு காண்க. தாமின்புறக் கொண்ட தாரத்தை
இறைவன் அடிமைத் திறமே கருதி அடியார்க்கு எவ்விதக்
கவலையுமின்றிக் கொடுத்ததே இதன் முடிந்த பொருளாகக்
கூறப் பெற்றது.
|