பக்கம் எண் :


572 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

வன் இங்கு மயக்கந் தீர்த்தலுடன், இவர்களை வன்பிறவி வேதனை “தீர்த்து
என்றும் மாறாத பேரின்பஞ் செய்கின்றானாதலின் இப்பெயராற் கூறினார்.

     தான் மகிழ்ந்தே - அருண் மீக்கூர்ந்து தந்த வெளிப்பாட்டினைக்
குறித்தது. “சலமிலன் சங்கரன்“ (அப்பர் பெருமான் - காந்தார பஞ்சமம் -
நமச்சிவாயத் திருப்பதிகம்) என்றபடி இறைவன் வேண்டுதல் வேண்டாமை
யிலாதவன்; ஆதலின் மிக மகிழ்தல் அருளின் வெளிப்பாட்டினைக்
குறித்தது என்க. வெளிப்பாடாவது பின்வருமாறு அடியார் காணும்படி
உமையம்மையாருடன் இடபவாகனத்து வெளிப்பட்டுக் காட்சி தந்து
அருளல். தான் - தானே - பிறர் வேண்டுதலின்றியே. ஏகாரம் தொக்கது.

     ஏலம் வார் குழல் - ஏலம் - வாசனை. இங்கு உமையம்மையார்
கூந்தலுக்குரிய இயற்கை மணங்குறித்தது. “ஏல வார்குழ லாளுமை நங்கை“
(நம்பிகள் - தக்கேசி - கச்சி - 1) காண்க. ஏலம் - மயிர்ச் சாந்து எனவும்,
வார் - வாரி அலங்கரிக்கப்பெற்ற எனவும் உரை கூறுவாருமுண்டு.
குழலாளோடு இடபவாகனனாய் - (434) பார்க்க. மனைவியாரையும்
உடன்கொண்டு செல்வார். உமாதேவியாருடன் எழுந்தருளியது போலும்.
சிறுத் - புரா - 84 காண்க. “நீடிய பேதையா ளுடனின்றி“ (447) என்றதும்
காண்க.

     சீலம் - நல்லொழுக்கம். சீலமார் பூசை. இங்கு விதிப்படி புரிந்த
அடியவர் பூசைகுறித்தது. பூசை என்று பொதுப்படக் கூறுவதனால் அடியவர்
பூசைக்குள்ளே நிறைந்த ஆண்டவன் பூசையும் உட்கொண்டதாம். 25

     465. (வி-ரை.) அன்பனே - எம்மிடத்து வைத்த அன்பினாலே எமது
அடியவர்களிடத்து அன்பு மிக்கவனே.

     அன்பர்பூசை அளித்த நீ - அன்பு நிறைதலாகிய காரணத்தால்
விளைந்தது அன்பர் பூசையாகிய காரியம் என்க.

     அளித்தல் - வளம் சுருங்கியபோதும் என்றும் விடாது பாதுகாத்துச்
செலுத்துதல். அணங்கு - தெய்வத்தன்மை வாய்ந்த பெண். இங்கு
மனைவியாரைக் குறித்தது. “எங்ஙனே அணங்கே!“ (450) என்றதும் காண்க.

     அணங்கினோடும் நீ யெய்தி - அடியார் பூசைக்கு உரிய அமுது
படைத்து உய்த்தது மனைவியாரது கற்பின் றிறத்தாலே நிகழ்ந்ததாலின்,
அச்சிறப்புப் பற்றி ஓடு உருபை மனைவியாருடன் சார்த்தி,
அணங்கினோடும் நீ எய்தியிருக்க
என்றருளினார். “நண்ணிய
மனைவியோடு நம்முடன் போதுக“ (436) என்ற விடத்துங் காண்க.

     நம்பெரு முலகம் - “நலமிகு சிவலோகம்“ (438) என்றதன் கீழ்க்
காண்க.

     இருநிதிக் கிழவன் - குபேரன். தானே ஏந்தி என்றது பிற
கணங்களன்றிக் குபேரன் தானே பெருநிதியம் ஏந்தி நின்று என்பதாம்.
பெருநிதியம் - எடுக்க வெடுக்கக் குறையாத சங்கநிதி - பதுமநிதி என்பன.

     மொழிவழியேவல் கேட்ப - உனது சொல் வழிப்பட்டு நின்று, நீ
ஏவின பணி செய்து வர. சிவலோகத்திலே இந்நாயனார்க்குக் குபேரனது
பெருநிதியத்தாலாவது என்னையோ வெனின்? செல்வமும், அடியார் திறத்து
அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும், பாரின் மல்க விரும்பி,
அக்கொள்கையினின்றே அடியவர் பூசை செய்து வந்தனர் நாயனார்; அவரது
எண்ணம் நிறைவேறுக என்று அடியவர்கள் நாளு நாளும் வாழ்த்தினர்;
அதன் பயனை உலகிற்குக் கொடுத்துப் பாரிலே நித்தமும் செல்வமும்
சிந்தையும் நீடி வருவதற்காக, இறைவன், இவர் சொல்வழிக் குபேரதேவன்
நிதியமேந்தி ஏவல் கேட்டு நிற்குமாறு அருளினார் என்பதாம். நாயனார்
சிவகணங்களிலொருவராய்ச் சிவலோகத்தில் எழுந்தருளியிருந்து உலகிலே
செல்வமும் சிவசிந்தையும் நீடி வருமாறு அடியவர்க்கு இன்றும் என்றும்
அருள் புரிந்து வருகின்றார் என்க. 442 உரை காண்க. இன்பம அடியார்
கூட்டத்தில் வாழும் பேரின்பம்.