பக்கம் எண் :


1044 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

சுகங்கருதியும் தருவர். திண்ணனார் அவ்வாறின்றி ஒன்றும் வேண்டாது உத்த
மாங்கத்தில் உத்தமாங்கமாகிய கண்ணைக் கொடுத்தனர் என்றதனை இங்கு
உணர்க.

     நலம் - முற்றும் அன்பேயாந்தன்மை. பின்னும் காட்ட - முன்
காட்டியதன்றிப் பின்னரும். மேலும் உறுதிப்படுமாறு. உம்மை இறந்தது
தழுவியது. பின்னருங் காட்டுதலாவது, தமக்குப் பயன்பட மற்றொரு கண்
எஞ்சியுள்ளது என்று கருதி ஒரு கண் கொடுத்தனர்; அதனையும் வேண்டின்
தருவரோ? என்ற ஐயப்பாடு நிகழாமற் காட்டுதல். நாயனார் தலைவர்;
ஆளாக உடையவர்தம் அடிமையை எவ்வாறும் ஏவல்கொள்ள
உரிமையுடையார் என்பதும், அடிமையினது உடலும் பொருளும் ஆவியும்
முழுதும் தலைவருடையனவேயாம் என்பதும் கருதி இங்கு நாயனார்
என்றார். கண்ணைத் தோண்டச் செய்தவனாதல் முதல்வனாரது கருணைக்
கிழுக்கில்லை, அவரத நன்மையை ஆன்மாக்கள் அறிந்துய்யச் செய்யும்
கருணையின் விளைவாதலின் என்பது.

     உலப்பில் செங்குருதி பாய் - செங்குருதி உலப்பிலதாய்ப் பாய
என்க. உலப்பு - ஒழிவு. செங்குருதி - அடைமொழி இயற்கை குறித்தது.

     பாயக்கண்டனர் - பாயச்செய்தனர். பாய்தல்போலக் காட்சிப்படுமாறு
திருவுள்ளம் வைத்தனர். கண்டனர் - காணுமாறு செய்தனர் என்ற
பொருளில் வந்தது. "பாய இருந்தனர்" (813) என்றது காண்க. பாய -
பாயும்படி செய்விக்க. பிரிவினை விகுதி தொக்கது என்று கொண்டு,
அவ்வாறு பாய்தலை மேலோர் கண்டனர் என்று கூட்டி உரைத்தலுமாம்.

     மற்றைக்கண் - வலத்திருக்கண் அல்லாத மற்றைக்கண் அதாவது
இடதுகண்.

     வேடர்குலப் பெருந்தவம் - "கானவர் குலம் விளங்க.....அளவில்
செய்தவத்தினாலே" (662) என்றவிடத்தும், அதன் மேற்பாட்டுக்களிலும்
உரைத்தவை பார்க்க.

     வந்த மேலோர் - கீழாயின அக்குலத்தில் வந்தவராயினும் மேலோர்
என்று கொள்ள நின்றது.

     கொள்கையின் உம்பர் மேலோர் - கொள்கை - கொள்ளப்பட்டது.
இங்கு அன்பு குறித்தது. உம்பர் - மேல் உலகம். அவ்வுலக வாசிகளாகிய
எல்லாத் தேவர்களையும் குறித்தது. உம்பர் - உம்பரினும். ஐந்தனுருபு
தொக்கது. உம்பர்கள் - ஒவ்வோர் பொருளை விரும்பிச் சிவனை பூசித்துப்
பதம் பெற்றவர்கள். திண்ணனார் அவ்வாறன்றி ஒன்றையும் வேண்டாது
அன்பே வடிவாகி இறைவர் பொருட்டே பூசித்துப் பேறு பெற்றவர். ஆதலின்
அவரினும் மேலோர் என்றார். இதனை அறிந்த "நான்முகன் முதலா யுள்ள
வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர்" (828) என்றதும் காண்க. இங்கு உம்பர்
என்றது தேவரில் மிக்க திருமாலைக் குறித்ததாகக் கொண்டு, அவரும்
ஆழிவேண்டிக் கண்ணையிடந் தருசித்தாராயினும் தமக்கு ஒரு பயனும்
வேண்டாது இறைவனது புண்தீர்த்தல் ஒன்றே கருதிக் கண்ணையிடந்
தப்பியதனால் அவரினும் மேலோர் என்றுரைப்பதுமாம்.

     மேலோர் (திண்ணனார்) கண்டபின் (825) என்று (825) - எண்ணுவார்
- ஊன்றி ஊன்றத் - தேவதேவர் - தரித்திலர் (826), - பாகர் - அங்கணர் -
அற்புதர் - திருக்கை - கையைத் - தடுக்க - வாக்கு மூன்றடுக்கு என்ற (827)
என்று இந்நான்கு பாட்டுக்களையும் முடித்துக்கொள்க. 175

     825. (வி-ரை.) கண்டபின் - (மேலோர்) அதனைக் கண்டபின்.
அதனை என்ற செயப்படுபொருள் வருவிக்க.

     கெட்டேன் - குருதிகாட்டும் சகுனம் கண்டபோதே "அத்தனுக்
கடுத்ததென் கொல்கெட்டேன்" (812) என்றது காண்க. இது தம்பெருமானுக்குத்
தீங்கு நேரக் கண்டு தரியாதெழுந்த மிக்க இரக்கங் குறித்தது.

     எங்கள் காளத்தியார் - முன்னரும் "எங்களத்தனார்" (818) என்றது
காண்க.