பக்கம் எண் :


அரிவாட்டாயநாயனார்புராணம்1179

 

பிளவுபட்டு அறும்படி கழுத்தினோடு மிடற்றினை அரிவாராயினார்,
பொருந்திய பிறப்பினை அரிவார் போன்றார். 17

     இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     917. (வி-ரை.) போதரா நின்றபோது - போதும் பொழுதில்.
போதருதல் - போதல், ஆநின்று - நிகழ்கால இடைநிலை. போதராநின்ற
- போந்து மேல் அடி பெயர்க்கமாட்டாமல் நின்ற என்ற குறிப்பும் பெற
நிற்றல் காண்க.

     புலர்ந்து, கால்தளர்ந்து, வருந்தி, தப்பி, வீழ்வார் என்று கூட்டுக.

     புலர்தல் - உணவில்லாமையால் உடல் வாடுதல்.

     கால் தளர்தல் - கால்கள் மேல் அடிபெயர்த்தலும், உடலைத்
தாங்குதலும் மாட்டாது நிலைகெடுதல். தப்பி் - போகின்ற நிலையும்
நிற்கின்ற நிலையும் தவறி. புலர்ந்ததனால் கால் தளர்தலும், அதனால்
வருந்தலும், அதனால் தப்புதலும், அதனால் வீழ்தலும் நிகழ்ந்தன என்ற
இம்முறையில் வரும் வினைகளைக் காரணங்குறிக்கும் வினையெச்சங்களாற்
கூறிப்போதல் காண்க.

     மாதரார் - மனைவியார், மாதரார் - கையால் அணைத்தும் என்று
கூட்டிக் கொள்க.

     மட்கலம் - ஆனைந்து கொண்ட கலம். இதனால் ஆன்பெற்ற
ஐந்தினையும் மட்கலத்திற் கொண்டு சென்றார் என்றறியப்படும். தாயனார்
அரிசி முதலியவற்றைக் கூடையிற் சுமந்து செல்ல, மனைவியார் அவர்பின்
ஆனைந்து ஏந்திச் சென்றார் என மேற்பாட்டிற் கூறினார். அதனை ஏந்திய
கொள்கலம் இன்னதென அங்குக் கூறாமையின் அது மட்கலமா மென்பதை
மட்டும் இங்குக் குறித்தமுறை காண்க.

     மூடு கை - செல்லும் வழியில் அசுத்தங்கள் வீழாதபடி காக்கும்
முறைபற்றிக் கலத்தைக் கையால் மூடிச் சென்றனர். இடதுகையினால் கலத்தை
ஏந்தியும் வலது கையினால் அதனை மேலே மூடியும் சென்ற மனைவியார்
அங்ஙனம் மூடிய வலது கையினால், கணவனாரை வீழாவண்ணம்
அணைத்தனர் என்க.

     வீழ்வாரை - மாதரார் - கையால் - காதலால் - அணைத்தும் என்று
மாற்றிப் பொருள் கொள்க. இங்ஙனம் முறையிற் கூறாது மாதரார் - வீழ்வாரை
- என முன் வைத்துக் கூறியது கால் தப்பியதைக் கண்ட மனைவியார் அவர்
வீழாமுன் தடுக்க அணைத்ததனை உணர்த்தும் பொருட்டு. கால் தப்பிய
நிலைக்கும் வீழ்கின்ற நிலைக்கும் இடையில் மாதரார் அணைத்த செயல்
நிகழ்ந்தமையின் அதனை அம்முறையே நாடகச் சுவைபடக் கூறிய நயம்
காண்க. வீழ்வார் - வீழ்வாரை; இரண்டனுருபு விரிக்க.

     மட்கலமும் - கூடை (916)யுமே அல்லது நல்குரவு (911) ஆயின
நிலையில் உள்ளார் எளிதிற்பெறும் கொள்கலங்களாம் என்பதும் காண்க.

     காதலால் - கணவனார் வீழாமற் றடுக்கும் ஆசையாலும், அதற்கு
மேலாக, அவ்வாறு தடுப்பதின் மூலம், அவர் இறைவனுக்காகச் சுமந்து
சென்ற கூடையினுள்ள பொருள்கள் வீழாமற் றடுக்கும் ஆசையாலும் என்க.

     கமர் - நிலவெடிப்பு. அக்காலம் நிலங்களிற் பயிர் அறுக்கப்பட்டு
நிலம் வெடிப்புக்களுடன் உள்ள காலமென்ப தறியப்படும். தாயனார் பேறு
பெற்றது தை மாதத்து ஆதிரை நாளாதலும் சிந்திக்க. இந்நிலம் நாயனாரது
ஊராகிய கணமங்கலத்துக்கும் அவர் வழிபட்ட திருத்தண்டலை நீணெறிக்கும்
இடையில் உள்ள வயல். இது இந்நாள் வழக்கிலும் காணப்படும். இடை -
ஏழனுருபு.

     பூதநாயகர் - சிவ பூதகணங்களின் தலைவர் - சிவபெருமான்.
ஐம்பூதங்களில் ஒன்றாகிய நிலத்தினின்று வெளிப்பட்டு நாயனார்க்கு
அருள்புரிகின்றாராதலின் இங்கு இப்பெயராற் கூறினார் என விசேடவுரை
காண்பர் ஆலாலசுந்தரம்பிள்ளை.

     இனி அங்குப் போவது ஏன் என மாற்றுக. ஏன் - என்ற வினாப்
பயனின்மை குறித்தது. தொண்டர் - கண்டு - இனி ஏன் - போவது? -
என்று (911), என -