மகிழ்ச்சி பெருக்கவே நீட என்க. பெருக்கம்
- அளவினாலும்,
நீடுதல் - காலத்தாலும் மிகுதல் குறித்தன.
மகிழ்ச்சி பெருதல் இங்கு
"விடேல் விடேல்" என்ற ஓசை கேட்டதனால் இறைவர் அமுது செய்தனர்
என்று உணர்தலாலும், தமது நியதியாகிய திருப்பணி முற்றுப்பெற இறைவர்
ஏற்றுக் கொண்டமையாலும் உண்டாகிய தென்க. ஊறுநீங்கியதனாலன்று.
எறிபத்த நாயனார் வாளினைத் தமது கழுத்திற்பூட்டி அரிந்திடலுற்ற போதில்
புகழ்ச்சோழநாயனார் அந்தவாளும் கையும் விடாது பற்றிப் பிடித்தபோது,
"மாதவர் வருந்தி நிற்ப" (597) என்ற செய்தியையும், ஆண்டுரைத்த
வற்றையும், இங்கு ஒப்பு நோக்குக.
அருட்பெருங்கருணை
- கைபிடித்ததும், விடேல் என்ற ஓசை
மிகவும் கேட்பித்ததும், ஊறு நீக்கியதும் முதலிய இவை. 19
922.
(வி-ரை.) அறிவிலாமையாவது- உள்குவா ருள்கிற் றெல்லா
முடனிருந்தறிவார் இறைவர் என்றும், அமுது செய்தருளவேண்டிக் கொண்ட
அவ்வேண்டுதலின் கண்ணே நிறைந்து அவ்வாறே செய்தருளுவார் என்றும்
துணிவுற அறியாது ஐயப்பட்டு அமுது செய்ததற்கு அறிகுறியாக "விடேல்"
என்ற ஓசை வேண்டுதல். என் அடிமை வேண்டி - யான் அடியவனாய்
உளனாதலை விரும்பி. அடிமைச் செயலை விரும்பி என்றலுமாம்.
இங்கு
அமுதுசெய் பரன் - இங்கு - கமரில்; அமுதுசெய்
-
விடேல் என்றோசையாற் புலனாயினபடி அமுது செய்தருளிய. பரன்
-
பெரியவன் - மகத்தானவன். தாழ்ந்த இடத்தில் வெளிப்பட்டதும்,
அறிவிலாமை கண்டும் அடிமை வேண்டி அமுது செய்ததும்,
அதற்கடையாளமாக ஓசை கேட்பித்ததும் அவரது மகத்துவத்தை விளக்கியன
என்பது குறிப்பு. பரன் (எல்லாப் பொருள்கட்கும்) அப்பாற்பட்டவன்
என்றலுமாம்.
துடி
இடை பாகமான - துடி - உடுக்கை. மேலும் கீழும் பெருத்து,
இடை சிறுத்துள்ளமையால், இருமுகமும் விரிந்து நடுச்சிறுத்த உடுக்கை,
இடைக்கு, மெய்பற்றி வந்த உவமம்.
துடியிடை
- இடையினையுடைய உமையம்மையார். அம்மையார்
உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. பாகம் தமக்குச்
செய்த அருள் குறிப்பதாகலின் இவ்வாறு தொடர்ந்து கூறினார்.
பொடி
- திருநீறு. பவளமேனி - இறைவனது
திருமேனி வண்ண
பேதங்களாற் றாக்கப்படாத பளிங்கு போன்றதாம். சுத்தஸ்படிக சங்காசம்
என்பர் வடவர். "சுத்தமார் பளிங்கின் பெருமலை" என்பது தமிழ்மறை.
ஆயினும் "பொன்மைநீலாதி வண்ணம் பொருந்திடப் பளிங்கிவற்றின்,
தம்மையாய் நிற்கும்" என்பவாதலின், "எரியலா லுருவ மில்லை" என்றபடி
நின்ற எரியுருவத்தையே பவளம் போலக் காட்டியது என்பதாம்.
"பவளம்போல் மேனியிற் பால்வெண் ணீறும்" (திருவிருத்தம் - திருக்கோயில்)
என்ற தமிழ்மறை இதனை நினைவு கூர்விப்பதாம்.
புரிசடை
- புரி - பலபுரியாக - வடமாக - திரித்த. புரிதல்
-
எப்போதும் சொல்லுதல் என்றுகொண்டு, கங்கை, பிறை, நகுதலை
முதலியவற்றைத் தாங்கிக் கொண்டு உலகை வாழ்வித்த கருணை கருதி,
அறிஞர் யாவராலும் எப்போதும் துதித்து எடுத்துச் சொல்லப்படும் எனவும்,
"கபர்த்திநே நம" என்று சிவாட்டோத்தரத்தில் துதித்துச் சொல்லப்படும்
எனவும் உரை கொள்ளுதலுமாம்.
புராணன்
- பழைமையானவன் - முன்னைப் பழம்பொருட்கு
முன்னைப் பழம் பொருள். எனக்கு அருள் செய்தாய்; அருள் உன் இயல்பு;
அது உனக்குப் பழமையாயுள்ளது என்றதாம். 20
|