|
மக்கள். யதுஎன்ற
அரசன் வழிவந்த சூரியகுலத்து க்ஷத்திரியர்கள்
யாதவர்எனப்படுவர். கண்ணன் அம்மரபில் வந்தமையால் யாதவன்
எனப்படுவன். அவன் இடைச்சேரியில் வளர்ந்து பயின்றமையால்
அத்தொடர்புபற்றி இடையர்கள் யாதவர் என்று மயங்கி யறியப்படுவர்
என்ப.
மேவிய
- என்பதும் பாடம். 8
934.
|
ஆயர்
குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்;
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்;
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலிற்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார். |
9 |
(இ-ள்.)
வெளிப்படை. (அவர்) ஆயர்குலத்தை விளக்கம் செய்திட
இவ்வுலகில் வந்து அவதரித்தவர்; தூயஒளி வீசுகின்ற திருநீற்றினை விரும்பும்
திருத்தொண்டில் நின்றவர்; வாக்கினாலும், உண்மைபெற வழுத்தும்
மனத்தினாலும் செயல் வகையினாலும் பேயோடாடுகின்ற சிவபெருமான்
றிருவடிகளை யல்லது வேறொன்றினையும் பேணாதவர்.
(வி-ரை.)
குலத்தை விளக்கிட - குலத்தை விளக்குதலாவது
சிவ
வழிப்பாட்டில் நிறுத்தி வழிகாட்டுதல். இவர் அவதரித்த குலம் என்று இவரால்
குலம் உலகில் விளங்கப் பெறுதல் என்றலுமாம். 872ல் உரைத்தவை பார்க்க.
திருத்தொண்டத் தொகையினுள் திருமூலரும் இந்நாயனாரும் ஆகிய இவரே
ஆயர் குலத்தவராவர், அவருள் சிவ யோகியாரான திருமூலர்,
இறந்துபோய்க்கிடந்த மூலன் என்ற இடையனது உடலினுட் புகுந்து மூலராய்
விளங்கியவர். எனவே, இந்நாயனார் ஒருவரே ஆயர் குலத்திற்றோன்றியபடி
சிவனடியாராய் விளங்கி அந்நிலையே சிவலோகத்திலும் வாழ்பவர். ஆதலின்
இவ்வாறு சிறப்பித்தார்.
உதயம்
செய்தார் - விளக்குதல் ஞாயிறு - மதி முதலிய பேரொளிப்
பொருள்களின் செயல். விளக்கிட என்றதற்கேற்ப
உதயம் செய்தார்
என்றார்.
தூய
சுடர்த் திருநீறு - ஏனைய ஒளிப்பொருள்களிற் காணப்படாத
தூய்மையுடன் விளங்கும் சுடர்.
இச்சுடர் தூய்மைசெய்வது என்பதுமாம்.
"சுத்தமதாவது நீறு", "புண்ணிய மாவது நீறு" என்ற தேவாரத்
திருவாக்குக்களும், "வெண்ணீற்றொளி போற்றி நின்று" (திருஞான - புரா -
216) என்ற மாபுராணமும் காண்க.
திருநீறு
விரும்பு தொழும்பு - திருநீறு வீடு தரும் சாதனம் என்று
கொண்டு அதற்குத் தொண்டு புரிதல். "நீற்றினை நிறையப் பூ "சுதலும், நீறு
பூசினாரைக் காணில் காதல் கொள்ளுதல் - உள்ள முருகுதல் - போற்றுதல்
- அவர் வேண்டுவன செய்தல் முதலியவையும் திருநீற்றுத்தொண்டு
எனப்படும். சிவபெருமான் றிருத்தொண்டாவன திருநீற்றுத் தொண்டேயாம்
என்றலும் பொருந்தும்.
வாயினின்.......வினைப்பாலின்
- வாக்கு, மனம், காயம் என்ற
மூன்றாலும் - இன்னுருபுகள் மூன்றும் கருவிப்
பொருளில் வரும் ஆன்
என்ற மூன்றனுருபாய்ப் பொருள் தந்து நின்றன.
வினைப்பால்
- உடலாற் செயல் செய்தல்.
மெய்யின்
வழுத்தும் மனத்தின் - மெய் - உண்மை. உண்மை
கூர்தரச் சிந்திக்கும் மனத்தினால். உண்மை கூர நினைப்பவர் மனத்தினுள்
இறைவர் வெளிப்பட நின்றருளுவர். "நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே,
புக்குநிற்கும்பொன்னார்சடைப் புண்ணியன்", "கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானைக் கரவார்பால், விரவாடும் பெருமானை", "வஞ்சனையா
லஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானை" , "மெய்மையன் பருள்
மெய்மை மேவினார்" முதலிய திருவாக்குக்கள் காண்க.
|