பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1237

 

     இந்நின்ற நிலையே - இங்குக் குழல் வாசித்துநின்ற இந்நிலையில்
வண்ணமே. என - என்றருளிச்செய்ய.

     அவரும் - அவ்வாறருள்பெற்ற ஆனாயரும்.

     அந்நின்றநிலை பெயர்ப்பார் - "இந்நின்றநிலை" என்றதற்கேற்ப
அந்நின்றநிலை என்றார். பெயர்ப்பார் - இடம் பெயர்ந்து செல்வாராகி.
கொன்றையின் நீழலில் நின்று வாசித்த அவ்வண்ணமாகக் குழல்
வாசித்துக்கொண்டே சிவபெருமானது மருங்கில் அமர்கின்றனராதலால்
அவரது அத்திருக்கோலத்தே உச்சிமுதல் அடிவரை முறையாகப் படம்
வரைந்து ஆசிரியர் காட்டிய தன்மையாக மேல் 940 - 943 வரை
திருப்பாட்டுக்களிற் கண்டதனை இங்கு நினைவு கூர்க.

     வாசனை - வாசித்தலை. இரண்டனுருபு தொக்கது. 937, 961 பார்க்க.
கேட்க என்றும் கேட்டுக்கொண்டிருக்கும்பொருட்டு.

     திருமருங்கு - பக்கம்; சாமீபம் என்ற நிலை. 40

966.



விண்ணவர்கண் மலர்மாரி மிடைந்துலக மிசைவிளங்க,
எண்ணிலரு முனிவர்குழா மிருக்குமொழி யெடுத்தேத்த,
அண்ணலார் குழற்கருவி யருகிசைத்தங் குடன்செல்லப்,
புண்ணியனா ரெழுந்தருளிப் பொற்பொதுவி னிடைப்புக்கார்.



41

     (இ-ள்.) வெளிப்படை. தேவர்கள் பொழியும் கற்பகப் பூமழை
நெருங்கி உலகின்மேல் விளங்கவும், அளவில்லாத அருமுனிவர்
கூட்டங்கள் மறைமொழிகளாலே எடுத்துத் துதிக்கவும், பெருமையுடைய
ஆனாயர் குழலிசையை வாசித்துப் பக்கத்தில் உடன்செல்லவும், புண்ணியப்
பொருளாயுள்ள சிவபெருமான் அங்குநின்றும் எழுந்தருளிப் பொன்னம்
பலத்தினிடைப் புகுந்தருளினர்.

     (வி-ரை.) விண்ணவர்கண் மலர்மாரி - தேவர்கள் பொழியும்
பூமழை. மலர் - கற்பகமலர். இவ்வுலகில் தெய்வ அற்புதங்கள் நிகழும்போது
தேவர்கள் பூமழை பொழிவர். 398 முதலியவற்றுள் முன்னுரைத்தவை பார்க்க.
தேவருலகத்தில் இவ்வகைத் திருவருள் வெளிப்பாடான நிகழ்ச்சிகள்
நிகழ்தற்கிடமில்லையாதலின், அவர்கள் பூவுலகின் இவை நிகழக் கண்டபோது
இவ்வாறு பாராட்டிப் பூமழை பொழிவர்.

     இருக்குமொழி - வேதமந்திரங்கள். இருக்கு - இங்கு வேதப்
பொதுமை குறித்தது. இறைவன் றிருவாக்கில் இருக்கும்மொழி என்பதும்,
என்றும்இருக்கும் நித்தியமாயின மொழி என்பதும் குறிப்பு. மொழிகளால்
ஏத்த என்க.

     அண்ணலார் - பெருமையுடையவர். உலகில் அவரது பெருமை
விளங்கிய இடமாதலின் இப்பெயராற் கூறினார்.

     குழற்கருவி இசைத்து அங்கு உடன்செல்ல - குழல்வாசனை
கேட்க, "நம்பால் அணைவாய்" என்று அருள்செய்யப் பெற்றாராதலின், அவ
்வாணையின்படியே அருகு குழல் இசைத்துச் சென்றார். அன்றுபோலவே
இன்றும் என்றும் குழல் வாசித்து ஐயரின் அருகு ஆனாயர் எழுந்தருளி
யிருக்கின்றார் என்க.

     "நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுன் னடியின்கீ ழிருக்க"
வேண்டும் என்று அம்மையார் தாம் வேண்டிக்கொண்டபடி ஐயரது
"எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றார்" என்ற சரிதம் இங்கு
நினைவு கூர்தற்பாலது. "இடையறாமற் கும்பிடும் கொள்கை யீந்தார்" (489),
"தம்முன் றொழுதிருக்கும் அழிவில் வான்பதங் கொடுத்து" (548), "கணத்தின்
முன்னாங்கோமுதற் றலைமை பெற்றார்" (605), "என்வலத்தில் மாறிலாய் நிற்க"
(829), துணையடிகள் தொழுதிருக்க" (திருநாளை - 36), "நம் மன்னுலகு
பிரியாது வைகுவாய்" (திருக்குறிப்பு - 127), "அரனார் மகனா ராயினார்"
(சண் - புரா - 59) "சிவலோகத்திற்