பக்கம் எண் :


முருகநாயனார்புராணம்1323

 

பாதங்களின் திருத்தொழில்களுமாம் என்பது மேல்வரும் ஏழு
திருப்பாட்டுக்களிற் போந்த பொருளாவதும் காண்க. மேற்சொன்ன மறை
என்பது வேதங்களையும், இங்குக்கூறிய ஞானம் என்றது சிவாகமங்களையும்
குறித்தது. தலை நிற்றல் - ஒழுக்கத்திற் சிறத்தல். ஊனம் - இடையறாது
அன்பு செலுத்துதற்கு வரும் தடைகள். அன்பால் மனம் உருகுதலாவது -
பெரியவற்றுளெல்லாம் பெரியவனாகிய இறைவன் உயிர்களின் சிறுமை
எண்ணாது எஞ்ஞான்றும் செய்துவரும் பேரருளின் பெருமையினை
எண்ணியெண்ணி அன்பு செய்தலால் உள்ளம் நெகிழ்தல். "அத்தாவுன்
அடியேனை அன்பால் ஆர்த்தாய்....பிழைத்தனக ளெத்தனையும்
பொறுத்தாயன்றே.....எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே"
(திருத்தாண்டகம்), "நாய் சிவிகை யேற்றுவித்த அம்மை" (திருவாசகம்);
"நாயனைய வென்னைப் பொருட்படுத்தி நன்கருளித், தாயனைய னாயருளும்
தம்பிரான்" (கோயினான் மணிமாலை - 11-ம் திருமுறை) முதலிய
திருவாக்குக்கள் காண்க.

     வேதங்களிற் றலைசிறந்ததனால் சிறப்பாகிய சிவாமங்களிற் றேர்ந்தார்;
அதனால் ஞானவழி நின்றார்; அதன் பயனாகச் சிவன்சேவடிகளில்
அன்பினால் உருகி, அவரது நாமம் பயின்றார்; அதனாற் சிவபூசையே
உறுதிப்பொருள் என்றறிந்து சிவனை முப்போதும் மலர்கொண்டு
அலங்கரித்துப் பூசித்து அழகு பார்த்துக் களித்தார்; திருவடி ஞானத்திற்
சிறக்கவே அடி அணைந்த அடியார் தொண்டினிற் சிறந்தொழுகினார்;
அதனாற் சிவனடிப் பேறுபெற்றனர் என்று இம்முறையே, இப்பாட்டிற்
சொல்லிய இத்தன்மைகளே மேல்வரும் சரித நிகழ்ச்சிகளாய் விளைந்தன
என்பதும் கண்டுகொள்க. "வேதச் சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ்
சென்றாற் சைவத், திறத்தடைவ ரிதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின்
ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்" (8 - 11) என்ற சிவஞான சித்தியார்
திருவாக்கு இங்குக் கருதத்தக்கது.

     முருகனார் - வந்தார்; - (அவர் ) முதல்வர்; - தலைநின்றார்; -
மனத்தார் எனமுடித்துக்கொள்க. அவர் என்ற சொல் வருவித்து முதல்வர்
முதலிய மூன்று பெயர்ப் பயனிலைகளுடன் கூட்டிமுடிக்க.

     முருகனார் என்ற பெயரின் பொருள்பற்றி மேலுரைக்கப்பட்டது. 5

1022.







அடைமே லலவன் றுயிலுணர வலர்செங் கமல
                               வயற்கயல்கண்
மடைமே லுகளுந் திருப்புகலூர் மன்னி வாழுந்
                               தன்மையராய்,
விடைமேல் வருவார்க்காளான மெய்ம்மைத்தவத்தா,
                               லவர்கற்றைச்
சடைமே லணியத் திருப்பள்ளித் தாமம் பறித்துச்
                               சாத்துவார்,     6
 
1023.







புலரும் பொழுதின் முன்னெழுந்து, புனித நீரின் மூழ்கிப்,
                               போய்,
மலருஞ் செவ்வித் தம்பெருமான் முடிமேல், வானீ
                               ராறுமதி
யுலவு மருங்கு முருகுயிர்க்க, நகைக்கும் பதத்தி
                               னுடன்பறித்த
வலகின் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை
                               களிலமைப்பார், 7
 
1024.





கோட்டு மலரு, நிலமலருங், குளிர்நீர் மலருங்,
                               கொழுங்கொடியின்
றோட்டு மலரு மாமலருஞ், சுருதி மலருந் திருவாயிற்
காட்டு முறுவ னிலவலரக் கனக வரையிற் பன்னகநாண்
பூட்டு மொருவர் திருமுடிமேற் புனைய லாகு
                               மலர்தெரிந்து,   8
 
1025.



கொண்டு வந்து, தனியிடத்தி லிருந்து, கோக்குங்
                               கோவைகளும்
இண்டைச் சுருக்குந் தாமமுட னிணைக்கும் வாச
                               மாலைகளும்
தண்டிற் கட்டுங் கண்ணிகளுந் தாளிற் பிணைக்கும்
                             பிணையல்களும்
நுண்டாதிறைக்குந்தொடையல்களுஞ்சமைத்து நுடங்குநூன்
                             மார்பர்,          9