உணங்கும்
- உலரும். இந்நெல்லைச் சேமித்து வைத்துக் கொள்ளும்
பொருட்டுப் பாறையில் உலர்த்தி எடுத்தல் மரபு.
இப்பாட்டால்,
இப்பதியின் - மக்கள் - மாக்கள் - மரம் - தொழில் -
உணா முதலிய பலவும் நாடகச் சுவைபெற இயற்கை வருணனையாகத்
தன்மையணியில் வைத்து ஆசிரியர் அமைத்துக் காட்டிய அழகு காண்க.1
அதனில்
(பதியில்) எங்கும் குன்றவர் வாழ்வார்; எங்கும் வன்றிரள்
விளா ஓங்குவன; அவற்றிற் கொடுஞ் செவி ஞமலி ஆர்க்கப்பட்டுள்ளன;
அவற்றின் கோட்டில் வார்வலை மருங்கு தூங்கும்; அடியில் பன்றியும்
புலியும் எண்கும் கடமையும் மானுமாகிய பார்வை உள்ளன; அன்றி
ஐவனமுமுணங்கும்; என உரைநடையிற் கூட்டிமுடித்துக் கொள்க.
வன்றிறல்
- என்பதும் பாடம். 3
653.
|
வன்புலிக்
குருளை யோடும் வயக்கரிக் கன்றினோடும்
புன்றலைச் சிறுமகார்கள் புரிந்துட னாடலன்றி
யன்புறு காதல் கூர வணையுமான் பிணைகளோடும்
இன்புற மருவி யாடு மெயிற்றியர் மகளி ரெங்கும். 4 |
(இ-ள்.) வெளிப்படை. அப்பதியில் எங்கும் வலிய
புலிக்குட்டிகளோடும் வெற்றியுடைய யானைக்கன்றுகளோடும்,
புன்றலையினையுடைய வேட்டுவச்சிறுவர்கள் விரும்பி விளையாடுதல் உள்ளது.
அன்றி அன்போடு ஆசைமிக அணைகின்ற பெண் மான்களோடு இன்பமுறக்
கூடிவிளையாடும் வேட்டுவச் சிறுமிகளும் உள்ளனர்.
(வி-ரை.)
புலிக்குருளை - யானைக்கன்று - மான்பிணை -
இவை
அவ்வச்சாதிக்குரிய பெயர்மரபு. "எப்பொரு ளெச்சொலி னெவ்வா
றுயர்ந்தோர், செப்பினரப்படிச் செப்புதல் மரபே" என்பதிலக்கணம். "நாயே
பன்றி புலி முயல் நான்கும், ஆயுங்காலைக் குருளையென்ப" (8) "யானையுங்
குதிரையுங் கழுதையுங் கடமையும், ஆனோடைந்துங் கன்றெனற்குரிய" (15),
புல்வாய் நவ்வி யுழையே கவரி சொல்வாய்
நாடிற் பிணையெனப் படுமே"
(57) என்ற தொல்காப்பிய மரபிற் சூத்திரங்கள் காண்க. வன்புலி - வயக்கரி
- அடைமொழிகள் அவ்வச் சாதிக்குரிய பண்பு குறித்தன.
புன்றலைச்
சிறுமகார்கள் - புன்றலை - எண்ணெயிடுதல்,
சிக்கறுத்தல் முதலிய பண்பாடின்றிக் குறுகிச் சுருண்டு பிளவுபட்டுச் செறிந்த
மயிர்கொண்ட தலையினையுடைய. மக - மக்களிளமைப் பெயர். ஆர் -
என்னும் பன்மைவிகுதி யேற்று மகார் என நின்றது. "குழவியு மகவு மாயிரண்
டல்லவை, கிழவ வல்வ மக்கட் கண்ணே" - (மரபியல் - 23) என்பது
தொல்காப்பியம். பின்னர் மகளிரை வேறு பிரித்தமையால் இங்கு மகார் -
என்பது இடநோக்கி ஆண்மக்களைக் குறித்து நின்றது. வேடர் சிறுமகார்கள்
புலிக்குருளை யானைக்கன்றுகளோடு விரும்பி விளையாடுகின்றார்கள்.
வேட்டுவச் சிறுமியர் மான்பிணைகளோடு இன்புற மருவியாடுகின்றார்கள்.
இவ்விருவகையினரும் அங்குள்ளார். ஆடும் மகளிர் என்றது போல ஆடும்
மகார்கள் என்னாது மகார்கள் ஆடல் என்றது அவராடல்களின் வீரச்சிறப்பு
நோக்கி என்க. இக்கருத்துப்பற்றி மகார்கள் ஆடலன்றி என்றாரேனும் ஆடும்
மகார்களன்றி என்பது கருத்தாகக்கொள்க. வேடர் மகார்கள் மரபுக்கேற்ப
இளமையிலே வீரத்தன்மையுடையார் என்பதுகுறிப்பு. புரிந்து - விரும்பி.
அன்புறு
காதல் கூர அணையும் - பழக்கத்தாலும் புல்முதலியன
ஊட்டிப் பாராட்டும் அன்பினாலும் தமக்குரிய இயற்கைத் தன்மையினாலும்
மான்பிணைகள் மகளிர்பால் தாமே அணைகின்றன என்க. பெண்களின்
கண்கள் தமது கண்களின்
1இதுபற்றி
எனது சேக்கிழார் - 127 - 128 பக்கங்களில் உரைத்தவையும் காண்க.
|