புழிப்போல. நாகனது
இல்வாழ்க்கையை இப்பாட்டானும், வாழ்க்கைத்
துணையாகிய தத்தையின் நலத்தை வரும்பாட்டானும், இல்வாழ்க்கைக்கு
நன்கலமாகி அறிவறிந்த நன்மகப் பேற்றினை அதற்கடுத்த பாட்டானும் கூறிய
வைப்பு முறையும் புதல்வர்ப்பேறு என்ற பெயராட்சியும்
குறிக்கத்தக்கன. 8
658.
|
அரும்பெறன்
மறவர் தாயத் தான்றதொல் குடியில் வந்தாள்;
இரும்புலி யெயிற்றுத் தாலி யிடையிடை மனவு கோத்துப்
பெரும்புற மலையப் பூண்டாள்; பீலியுங் குழையுந் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூரரிப் பிணவு போல்வாள். 9 |
(இ-ள்.)
வெளிப்படை. (தத்தை) பெறுதற்கரிய சிறப்புடைய மறவர்
தாயத்திலே உயர்ந்த பழங்குடியிற் பிறந்தவள்; பெரிய புலிப்பல்லாலாகிய
தாலியை இடை யிடையே பலகறைகளைக் கோத்துப் பிடரியின் கீழும் நீண்டு
தொங்கும் படி அணிந்தவள்; மயிற்பீலியும் இலைத்தளிர்களும் மோத
வண்டுகள் மொய்க்கும் பூமாலையை அணிந்த, உச்சிக் கொண்டையை உடைய
அச்சந் தரும் பெண்சிங்கத்தைப் போன்றவள்.
(வி-ரை.)
பெறல் அரும் மறவர் என்க. மறவர் -
சாதி. தாயம் -
அதனுட் பிரிவாகிய குலம். தொல்குடி - அதனுட்
பிரிவான குடி.
"நடைமரபிற் குடிகாப்பண், விலக்கின்மனை யொழுக்கத்தின் மேதக்க
நிலைவேளாண், குலத்தின்கண் வரும்பெருமைக் குறுக்கையர்தங்
குடிவிளங்கும்" (திருநா - புரா - 15) "அந்தணர்தங் குலமுதல்வ ராசின்மறை,
கைப்படுத்த சீலத்துக் கவுணியர்கோத்திரம்விளங்க" (திருஞான - புரா - 15)
"தருமுறைக் கோத்திறத்திற் றங்குலஞ் செப்பி" (திருஞான புரா - 1235)
முதலியவை காண்க. அரும் பெறல் மறவர் என்றது
கண்ணப்ப நாயனாரைப்
பெறும் பெரியதோர் பேறு பெற்ற மரபாதலின் என்க. இதனை வந்தாள்
-
என்றதனோடு கூட்டி இம்மரபிற் பெறலகு மணியாய்ப் பிறந்தவள் என்று
தந்தையைக் குறிப்பதாய்க் கூறுவாறுமுண்டு. பெற்றியால்
- என்றதற் கேற்ப
உரை கொள்வது பொருத்தமுடைத்தாம். "கானவர்தங் குலமுலகு போற்றவந்த
கண்ணப்பர்" - திருஞான - புரா - 1017 என்றது காண்க. இனி,
அரும்பெறற்றொல்குடி எனக் கூட்டியுரைத்தலுமாம்.
தாயத்து
- பெருங்கிளைகளில் ஒன்றாகிய. ஆன்று -
குலவொழுக்கத்தின் மேம்பட்ட. தொல்குடி
- "இருவர்ச் சுட்டிய பல்வேறு
தொல்குடி" (திருமுருகாற்றுப்படை) என்றபடி வழிவழியாக வழாது, நீண்ட
காலமாய்த் தொடர்ந்துவரும் பழங்குடி,
இரும்புலி
எயிற்றுத் தாலி - இரும்புலி - பெரும்புலி. வேங்கை.
புலிப்பல்லைத் தாலியாகக் கோத்தணிவது குன்றவர் பழமரபு. "புலிப்பல்
கோத்த புலம்பு மணித் தாலி - "(புறநானூறு) முதலிய பழந்தமிழ்நூ லாட்சிகள்
காண்க. இடை இடை மனவு கோத்த என்றமையால்
புலிப்பற்கள் பலவற்றை
இடையிடையே பலகறைகளைக் கோத்து மாலையாக்கித் தாலியாக அணிவது
வழக்கென்பதாம். இவர்களது இளஞ்சிறார்க்கும் இவை போல்வனவற்றைக்
காப்பாகவும் அணியாகவும் அணிவது நாட்டு வழக்கு. 669 பார்க்க. மனவு -
பலகறை. மணமகன் வீரத்தாற் கொன்ற புலியின் பற்களைக்கோத்துத்
தாலியாக மணமகளுக்கு அணிவதும் வழக்குப்போலும். "மறங்கொள் வயப்புலி
வாய்பிளந்து பெற்ற, மாலை வெண்பற்றாலி" (வேட்டுவ வரி - 27 - 28)
என்பது சிலப்பதிகாரம்.
பெரும்புறம்
- பிடரியினை அடுத்துள்ள முதுகின் பாகங்களில்.
அலைய - தொங்க என்பர் மகாலிங்கையர். பிடரியைச்
சிறுபுறம் என்னும்
வழக்கும்காண்க.
பீலி
- மயிற்பீலி. இந்நாள் ஐரோப்பியர் முதலிய நவீனர் வழக்கிலும்
உயர் குடிப்பெண்கள் தலையில் வான்கோழி (Ostrich)
முதலிய
பறவையிறகுகளை அணிதல்காண்க. ஆயின் எந்தப் பறவையிறகுகளும்
மயிற்பீலியின் அழகுக் கொவ்வா என்பது துணிபு. இது கொண்டே.
முற்காலத்தில் ஐரோப்பியரும்
|