|
28. திருஞானசம்பந்த நாயனார் புராணம் |
தொகை |
"வம்பறா வரிவண்டு மணநாற மலரும் |
மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா |
வெம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்......" |
- திருத்தொண்டத்தொகை (5) |
வகை |
வைய மகிழயாம் வாழ வமணர் வலிதொலைய |
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச்செவ்வாய் |
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின் |
தைய லருள்பெற் றனனென்பர் ஞானசம் பந்தனையே. |
(33) |
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகனல்ல |
சந்தா ரகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து |
கொந்தார் சடையர் பதிகத்தி லிட்டடி யேன்கொடுத்த |
வந்தாதி கொண்ட பிரானருட் காழியற் கொற்றவனே. |
(34) |
- திருத்தொண்டர் திருவந்தாதி |
விரி |
1899.வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் |
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத |
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் |
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். |
1 |
இரண்டாம் காண்டம்:- இப்புராணத்தின் பெரும்புரிவுக ளிரண்டனுள் இரண்டாம் பிரிவு. |
சருக்கம்:- இனி நிறுத்தமுறையானே, ஆறாவதாகத் திருத்தொண்டத் தொகையினுள் "வம்பறா வரிவண்டு" என்று தொடங்கும் திருப்பாட்டிற் றுதிக்கப்பட்ட ஆறு அடியார்களது சரிதம் கூறும் பகுதி. அவர்களாவார் : திருஞான சம்பந்த நாயனார், ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருமூல நாயனார், தண்டியடிகணாயனார், மூர்க்க நாயனார், சோமாசிமாற நாயனார் என்ற அறுவர். |
புராணம்:- அச்சருக்கத்தினுள் முதலாவது திருஞானசம்பந்த நாயனாரது சரித வரலாறும் பண்புங் கூறும் பகுதி. இவ்வாற்றான் முதலாவது திருஞான சம்பந்த நாயனார் சரிதங் கூறத் தொடங்குகின்றார். |
தொகை:-வம்பினிடத்து மாறாதிருக்கும் வரிகளையுடைய வண்டு களுடன் மணம் வீச மலர்த்தும் தேன் பொருந்திய மலராலாகிய நல்ல கொன்றை மாலையை. |