பக்கம் எண் :

2திருஞானசம்பந்தநாயனார் புராணம்

28. திருஞானசம்பந்த நாயனார் புராணம்
தொகை
"வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
     மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா
 வெம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்......"
- திருத்தொண்டத்தொகை (5)
வகை
வைய மகிழயாம் வாழ வமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தைய லருள்பெற் றனனென்பர் ஞானசம் பந்தனையே.
(33)
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகனல்ல
சந்தா ரகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தி லிட்டடி யேன்கொடுத்த
வந்தாதி கொண்ட பிரானருட் காழியற் கொற்றவனே.
(34)
- திருத்தொண்டர் திருவந்தாதி
விரி
1899.வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
1
     இரண்டாம் காண்டம்:- இப்புராணத்தின் பெரும்புரிவுக ளிரண்டனுள் இரண்டாம் பிரிவு.
     சருக்கம்:- இனி நிறுத்தமுறையானே, ஆறாவதாகத் திருத்தொண்டத் தொகையினுள் "வம்பறா வரிவண்டு" என்று தொடங்கும் திருப்பாட்டிற் றுதிக்கப்பட்ட ஆறு அடியார்களது சரிதம் கூறும் பகுதி. அவர்களாவார் : திருஞான சம்பந்த நாயனார், ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருமூல நாயனார், தண்டியடிகணாயனார், மூர்க்க நாயனார், சோமாசிமாற நாயனார் என்ற அறுவர்.
     புராணம்:- அச்சருக்கத்தினுள் முதலாவது திருஞானசம்பந்த நாயனாரது சரித வரலாறும் பண்புங் கூறும் பகுதி. இவ்வாற்றான் முதலாவது திருஞான சம்பந்த நாயனார் சரிதங் கூறத் தொடங்குகின்றார்.
     தொகை:-வம்பினிடத்து மாறாதிருக்கும் வரிகளையுடைய வண்டு களுடன் மணம் வீச மலர்த்தும் தேன் பொருந்திய மலராலாகிய நல்ல கொன்றை மாலையை.