பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்25

துக், காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்" (பிள் - பிரமபுரம் - சீகா.) என்று இத்தன்மையையும் அதற்குச் சிவன் அருள செய்வதனையும் பிள்ளையார் கூறியருளுகின்றார்.
     உளரானார் -உலகத்துக்காகத் தவஞ்செய்தலின் உள்ளவராயினார்.1281 பார்க்க.
15
தாயார்
1914.மற்றவர்தந் திருமனையார் வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினா; ரெவ்வுலகும் பெறற்கரிய பெருமையினார்;
பொற்புடைய பகவதியா ரெனப்போற்றும் பெயருடையார்;
கற்புமேம் படுசிறப்பிற் கணவனார் கருத்தமைந்தார்.
16
     (இ-ள்.) மற்று அவர் தம் திருமனையார் - அவருடைய திருமனைவியார்; வாய்ந்த......பெற்றியினார் - வாய்ப்புடைய வேதியரது மரபில் வரும் தன்மையுடையவர்; எவ்வுலகும்.......பெருமையினார் - எவ்வுலகமும் பெறுதற்கரிய பெருமையினையுடையவர்; பொற்புடைய...... பெயராற் - அழகுடைய பகவதியார் என்று போற்றப்படுகின்ற பெயரினையுடையவர்; கற்பு........கருத்து அமைந்தார் - கற்பினாலே மேம்பாடு பெறும் சிறப்புப்பற்றிக் கணவனாரது கருத்துக் கிசையத் தாம் அமைந்து ஒழுகி வருவாரானார்.
     (வி-ரை.) இதனால் பிள்ளையாரது திருத்தாயாரின் மரபுநலனும் குணநலனும் கற்புநலனும் கூறப்பட்டன.
     வாய்ந்த மறை மரபு - சிவபாத விருதயரது மரபு - குடி - கோத்திரம் முதலியவற்றுடன் அணைவதற் குரிமைவாய்ந்த மரபு. இது உடல் பற்றிய தன்மை. மேல் "மரபிண்டுஞ் சைவநெறி வழிவந்த கேண்மை" (1915) என்று இதனைத் தொடர்ந்து உயிரின் தன்மைபற்றிக் கூறுவதும் காண்க.
     எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமை - இது 1940ல் விளக்கப்பட்டபடி உமையம்மையாரின் திருமுலை ஞானப்பால் உண்ண உள்ள பிள்ளையாருக்குத் தமது முலைப்பால் ஊட்டிய பெருமை.
     பகவதியார் - உமையம்மையாரது பெயர். பகவன் என்ற சிவபெருமானது பெயரின் பெண்பாற் பெயர். கடவுளரின் பெயரை மக்கள் இட்டு வழங்கும்முறை.
     போற்றும் பெயர் - யாவரும் போற்றும் பெயர் என்றது உமையம்மை பெயருக்கும், பிள்ளையாரது திருத்தாயாராதலின் இவ்வம்மையார் பெயருக்கும் பொருந்தும்.
     கற்பு.......கருத்தமைத்தார் - கற்பின் தன்மை விளக்கப்பட்டது.
     சிறப்பாற் - என்பதும் பாடம்.
16
மனை வாழ்க்கை நலம்
1915.மரபிரண்டுஞ் சைவநெறி வழிவந்த கேண்மையராய்
அரவணிந்த சடைமுடியா ரடியலா லறியாது
பரவுதிரு நீற்றன்பு பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை வியப்பெய்த மேவுநாள்,
17
சமண் பரவக் கண்டுஇடருழத்தல்
1916.மேதினிமேற் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்க மருகியர னடியார்பாற்,
பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத விருதயர்தா மிடருழந்தர் .
18
     1915. (இ-ள்.) மரபு........கேண்மையராய் - இருமரபுகளும் சைவநெறியில் வழி வழி வந்த கேண்மை பொருந்தியவர்களாய்; அரவு........அறியாது - பாம்பை அணிந்த