பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்759

     சொல்லி - திருக்கோயிலினுள் இறைவரைப் போற்றுதல், துதித்தல், பாடுதலன்றி வேறு பேச்சுக்கள் பேசலாகாதென்பது விதி; ஆயின் இப்பெரும் பேச்சைத் திரு முன்னர் வைத்துப் பேசித் துணிதலும் முடித்தலுமே தகுதி; ஆதலின் கோயிலினுக்குள்ளாகாமலும், புறமாகாமலும் உள்ள தன்மைபெற்ற பெரிய திருக்கோபுரத்துள்ளிருந்து பிள்ளையார் அரசுகளிடம் இவ்வார்த்தை வரலாற்றை சொல்லினார் என்க; அன்றியும் இத்தகைய சைவ மேன்மைப் பேச்சுக்கள் அங்கு நிகழும் மரபும் வழக்குமுண்டு; சொற்றனி மன்னர் - புகலி மன்னர் - இருவரையும் ஒன்றுபோல இத்தன்மையாற் கூறியதுபற்றி முன்னர் உரைத்தவை பார்க்க. பின்னரும் (2839) காண்க.
     உரைத்துவிட்ட வார்த்தை - சொல்லி மாந்தரை ஏவி யனுப்பிய செய்தி; "தென்னாடு உற்றசெயல்" வார்த்தை - விண்ணப்பத்தை; இரண்டனுருபு விரிக்க.
     தனி - மேற்பாட்டிற் கூறும் உரிமைப்பாட்டின் பெருமை குறிக்கத் தனி என்று சிறப்பித்தார்.
     ஏழுந்தருளுதற்குத் துணிந்த - செல்ல முடிபுசெய்த.
     செயலை - உரைத்துவிட்ட வார்த்தையைச் சொல்லி என்று கூட்டிமுடிக்க.
     உரிமையமைச்சர் - கோற்றொழில் திருத்தி நாட்டை நன்னெறிப்படுத்தும் உரிமை அமைச்சருடையதே என்பது குறிக்க உரிமை என்றார்.
615
     2514. (வி-ரை.) இப்பாட்டால் அரசுகளருளிய தடையும், அதற்குப் பிள்ளையார் அருளிய விடையும், அதற்கு உள்ள ஆணையாகிய ஆதரவும் எடுத்துக் கூறப்பட்டன.
     பிள்ளாய்! - பிள்ளையார் "அப்பரே!" (1451 - 2479) என்றதனையே மேற்கொண்டு அரசுகள் இவ்வாறு விளித்தனர்; பிதாவின் நிலைபூண்டு பிள்ளையாரைத் தீங்குவராமற் காவல்செய்யும் தன்மைகொண்டு மொழிகின்றாராதலின் இவ்வாறு அழைத்தது அவர்பால் அன்பின்மிகுதி குறித்ததேயன்றிக் குறைவுபடுத்தாதென்க.
     வஞ்சனை - வஞ்சித்துச்செய்யும் தொழில்கள்; அவதி - எல்லை; அளவு; அவதி - தீமை - தொல்லை - துன்பம் - என்று கொண்டு, அமண்கையர் வஞ்சனை செய்வார்; ஆனால் அதனால் தீங்கு வாராது என்ற குறிப்புப்படவும் நின்றது; இப்பொருளில் ஓர் - ஒன்றும் என முற்றும்மை விரித்துரைத்துக்கொள்க; "ஆனால் உரை செய்வதொன்றுளது; அது கோள் தீய ஆனதாற் செல்ல உடன்படுவதொண்ணாது" என்றுரைக்க. அமண்கையர் - அமண் - ஆடையில்லாமை; கையர் - கைக்கொள்பவர்; அமணராகிய கீழ்கள் என்றலுமாம் - மானமில்லாமையும் தீக்குணமும் குறிப்பு.
     உறுகோள் உறும் - பொருந்தும்; கோள் - நவக்கோள்கள்; கிரகநிலை; "உறுகோளு நாளும்" (பதிகம் - 11).
     செல்ல உடன்படுவது - பிள்ளையார் உடன்படுவதென்றும், தாம் உடன்படுவதென்றும் இருவழியும் உரைக்கநின்றது.
     "பரசுவது...அணையாது" எனப் பகர்த்து - இது பிள்ளையார் எடுத்துக் கூறியபடி பதிகக் கருத்தும் குறிப்புமாம்; பதிக மகுடம் காண்க.
     பரமர் தாள்போற்றி - பதிகத்தால் அரசுகளது தடைக்கு விடை பகர்ந்ததனோடு பரமர் துணைசெய்தருளும்படி போற்றியதுமாம்; "அடியாரை வந்து நலியாத வண்ண முறைசெய், ஆன சொன்மாலை" (பதிகம் - 11).
     "வேயுறு தோளி"யை - "வேயுறு தோளி" என்று தொடங்கும் பதிகத்தை; முதற்குறிப்பு.