|
நெருங்கிவளர் கமுகு - கமுகுகள் அடர்த்தியாய்ப் பயிரிடப்படும் தன்மை குறிக்க நெருங்கிவளர் என்றார். |
உடுத்த நிறைமருதம் - நெல் - தென்னை - கமுகு இவற்றைச் சுற்றிலும் கொண்டிருத்தல், இவற்றை அந்த மருதநிலம் ஆடையாக உடுத்ததுபோலத் தோற்றமளிக்கும் என்பது. மருதம் - வயல்களையுடைய நாடும், நாட்டைச் சார்ந்த பகுதிகளும்; சோழ நாட்டின் கடல்சார்ந்த பகுதியாகிய நெய்தலை முன்சொன்னார்; அடுத்துக் காடுசார்ந்த முல்லை சாரும் பகுதியை மேல் (2526) கூறுதல் காண்க; இவ்வாறு பிள்ளையார் திருவாலவாய்க்குச் சென்றருளும் புராண வரலாற்றின் வழியே நாட்டின் இயல்புகளையும், வளங்களையும் உடன்கூறிக் காட்டிச்செல்லும் ஆசிரியரது கவிநலம் காண்க; நிறை - வழிச்செலவிற்கும் மக்களின் நலங்கட்கும் உரிய வசதிகள் நிறைந்த; இதனை வரும் பாட்டில் விரிக்கின்றார். |
625 |
திருக்கடிஇருளம் |
திருச்சிற்றம்பலம் | பண் - நட்டராகம் - 2-ம் திருமுறை |
|
பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை |
கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு குரைகழல் சிலம்பார்க்கக் |
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம் |
முடிகள் சாய்த்தடி வீழ்தரு மடியரை முன்வினை மூடாவே. |
(1) |
தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர் மன்னனற் சம்பந்தன் |
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகண் மாலதாய் மகிழ்வோடுங் |
கனம லிகட லோதம்வந் துலவிய கடிக்குளத் தாமர்வானை |
யினம லிந்திசை பாடவல் லார்கள்போ யிறைவனோ டுறைவாரே. |
(11) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- கடித்தளத்துறையும் கற்பகத்தை வணங்குவோரை வினை மூடா; அவனை ஏத்துவார் குணமுடையவர். |
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பொடி - திருநீறு; கிணின் - ஒலிக் குறிப்பு; கற்பகம் - இப்பதியின் சுவாமி பெயர்; பாட்டுத்தோறும் வைத்துப் போற்றப்பட்டது காண்க; இத்தலம் இவ்விறைவர் பெயராலே வழங்கப்படுவது தலவிசேடம் பார்க்க முன்வினை - பழவினை; - (2) விண்களார் - தேவர்; மண்களார் - நிலவுலகத்தவர்; ஆர்தர - நிறைய; பொருந்த; - (3) நற்கரி - பின் இறைவரது சார்பு பெறுதலால் நல் என்றார்; - (4) தொத்து - கொத்து; பார் இடத்தவர் - நிலஉலகோர்; சீர்கொள் செல்வங்கள் ஏத்த சிறப்புப்பொருந்திய இறைமைக் குணங்களைத் துதிக்க; இறைமைக் குணங்கள் - ஐசுவரியங்கள்; சர்வைசுவர்யசம்பன்ன; சம்பு என்பது சுருதி; - (5) மதியொடு - தழனாகம் - சூடிய முடியினன் என்க; அலர்ந்தன மலர் - பலகொண்டு - அலர்ந்தனவாகிய பலவகை மலர்களையும் கொண்டு; கரும்பு கார்மலி கொடிமிடை - கரும்புகள் நிழல்செய்யும் நிறைந்த கொடிகள்போல நெருங்கிய; கரும்பும் கெடிகளும் மிடை என்றுரைத்தலுமாம்; விதி - நல்விதி; - (6) சடைக்கு - சடையின்கண்; சடையில் - இலங்கிய என்க; - (7) கோலத்த கொடிகுலவு - என்க. கோலத்த - கோலத்தையுடைய; கோலம் - பலநிறம் - அளவு - சித்திரம் முதலிய அழகியல்கள்; மாடங்களின் குழாமும் பல பொய்கைகளும் நிறைந்த கடிக்குளம் என்றும், புள்ளினம் அன்னங்கள் பூவை |