பக்கம் எண் :

774திருஞானசம்பந்தநாயனார் புராணம்

சேரும் பொய்கை என்றும் கூட்டி உரைக்க; கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் - தமது புரிசடையும் அம்மையாரது கூந்தலும் சேர்ந்து கலக்கும்படி கண்ணி சூடியவர்; நின்று நின்று - அடுக்குப் பல படியாக என்ற பொருள் தந்துநின்றது நின்று ஏத்துவார் மேல்வினை நிற்க கில்லா என்றது சொல்லணி நயம்; - (8) குணம் - நற்குணம்; குணமுடையவராவர்; குணமுடையவர்தாம் ஏத்துவார் என்று கூட்டினுமமையும்; முன் விதியுடையவர் தாமே (5) என்றவிடத்தும் இவ்வாறு கூட்டினும் அமையும்; - (9) துயின்றவன் அயனொடு - துயின்றவனும் அயனும்; - (10) அடியார் பெருமை கூறிற்று; - (11) மாலதாய் - மால் - இங்கு மிக்க அன்புமுதிர்ச்சியின் மெய்ப்பாடு குறித்தது; கனம் - மேகம்.
     தலவிசேடம் :- திருக்கடிக்குளம் - காவிரித் தென்கரை 109வது தலம். இது கற்பகநாதர் கோயில், கற்பகனார் கோயில், கற்பகனார் குளம் என்று பலவாறும் இறைவனார் பெயருடன் சேர்த்து வழங்கப்படும். கற்பகவிநாயகர் பூசித்து மாம்பழம் பெற்ற வரலாறுபற்றி இப்பெயரெய்தியதென்பர்; இவ்விநாயகமூர்த்தி கோயிலுக்கு வெளியே தென்மேற்கு மூலையில் எழுந்தருளிவுள்ளார். சுவாமி - கற்பகநாயகர்; அம்மையார் - சௌந்தரநாயகி; தீர்த்தம் - விநாயகதீர்த்தம்; பதிகம் 1.
     இது பாண்டி என்னும் நிலயத்தினின்றும் தெற்கே மட்சாலையில் வேதாரணியம் - முத்துப்பேட்டை மட்சாலை சந்திக்குமிடத்திலிருந்து கிழக்கே அரை நாழிகையளவில் அடையத்தக்கது.
திருஇடும்பாவனம்
திருச்சிற்றம்பலம்பண் - நட்டபாடை - 1-ம் திருமுறை
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கண் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இனமாதவ சிறைவர்க்கிட மிடும்பாவன மிதுவே.
(1)
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
விடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியு ளணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.
(11)
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- இறைவரது இடம் இடும்பாவன மிதுவே. பதிகப் பாட்டுக்களின் மகுடம் பார்க்க.
     பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மனமார்தரு...மைத்தர்கள் - மனம்பொருந்திய மனைவியாரும் தாமுமாய் வரும் மக்கள் தொழும்; இதனை "எண்ணார்ந்த" (2521) என்று குறிப்பித்தனர் ஆசிரியர்; தனமார்தரு...உந்தி - தனம் - கடல்படு பொருள்களாகிய சங்கங்களையும் முத்துக்களையுமுடைய வங்கங்களின் கூட்டம் வரும் சதுப்பு நிலப்பகுதி; அரக்கன் - இடும்பன் என்ற அசுரன்; மிகுகுன்றில் - இறைவர்க்கிடம் இடும்பாவனம் - இடும்பன் தங்கியிருந்த ஊர் குன்றளூர்; அவன் பூசித்தது இடும்பாவனம். இத்தொடர்பற்றி இவையிரண்டினையும் சேர்த்துப் பதிகத்துப் பாடியருளினர்; 11-வது பாட்டுப் பார்க்க. குன்றில் - குன்றளூரில்; அரக்கன்மிகு - அரக்கன் விருப்புடன் இருந்து ஆட்சிபுரிந்த; இனமாதவரிறைவர் - பெருந்தவர்களுக்குத்