பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்777

அங்கங்கே யுழவர்குழா மார்க்கின்ற வொலியெங்கும்
எங்கெங்கும் மலர்ப்படுக ரிவைகழிய வெழுந்தருளி,
626
2525.தடமெங்கும் புனல்குடையுந் தையலார் தொய்யினிறம்
இடமெங்கு மந்தணர்க ளோதுகிடை யாகநிலை
மடமெங்குந் தொண்டர்குழா மனையெங்கும் புனைவதுவை
நடமெங்கு மொலியோவா நற்பதிக ளவைகடந்து,
627
2526.நீர்நாடு கடந்தருளி நெடும்புறவிற் குறும்புதல்கள்
கார்நாடு முகைமுல்லைக் கடிநாறு நிலங்கடந்து
போர்நாடுஞ் சிலைமறவர் புன்புலவைப் பிடைபோகிச்
சீர்நாடுந் தென்பாண்டி நன்னாடு சென்றணைவார்,
628
2527.மன்றன்மலர்ப் பிறங்கன்மருங் கெறிந்துவரு நதிகள்பல
சென்றணைந்து கடந்தேறித் திரிமருப்பின் கலைபுணர்மான்
கன்றுதெறித் தனவுகைக்குங் கானவதர் கடந்தணைந்தார்
கொன்றைநறுஞ் சடைமுடியார் மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம்.
629
     2524. (இ-ள்.) பொழிப்பு. சங்குகள் நிறைந்த வயல்களில் எங்கும் நெல்லும் கழைக்கரும்புகளுமுள்ளன; வாசனை எங்கும் பரவி வீசும் தாமரைகள் நிறைந்த குளிர்ந்த வாசத்தடங்கள் எங்குமுள்ளன; அங்கங்கேயும் உழவர் கூட்டங்கள் கம்பலை செய்யும் ஒலி எங்கும் நிறைந்துள்ளன; மலர்கள் நிறைந்த பள்ள நிலங்கள் எங்கெங்கும் உள்ளனவாம்; இவற்றையெல்லாம் நீங்கி எழுந்தருளி,
626
     2525. (இ-ள்.) தடமெங்கும்...தொய்யினிறம் - தடாகங்கள் எங்கும் நீராடும் பெண்களின் தொய்யிற் குாம்பின் நிறம்; இடமெங்கும்...யாகநிலை - நகர்புறத்தின் இடங்களில் எங்கும் மறையவர்களின் ஒதுகிடைகளும் யாகசாலைகளும்; மடமெங்கும் தொண்டர்குழாம் - மடங்கள் எங்கேயும் தொண்டர்கூட்டங்கள்; மனை எங்கும் புனைவதுவை - மனைகளில் எங்கும செய்கின்ற கல்யாணங்கள்; நடமெங்கும் ஒலி - ஆடலின் உடன் எங்கும் பாடலின் ஒலிகள்; ஒவா - நற்பதிகள் அவை கடந்து - இவ்வாறு உள்ள தன்மைகள் எல்லாம் நீங்காது நிறைந்துள்ள நல்ல பதிகளையும் கடந்து;
627
     2526. (இ-ள்.) நீர்நாடு கடந்தருளி - இவ்வாறு சென்று நீர்நாட்டினைக் கடந்தருளி (அதன்மேல்) நெடும்புறவில்...நிலங்கடந்து - நெடிய புறவங்களில் சிறுதூறுகளில் கார்காலத்தை நாடுகின்ற முல்லையரும்புகளின் மணங்கமழும் முல்லை நிலங்களைக் கடந்து; போர்நாடும்...போகி - போரினை நாடுகின்ற வில் ஏந்திய மறவர்கள் பயின்று வாழும் புன்புலங்களாகிய பாலை சார்ந்த இடங்களின் இடையே சென்று; சீர் நாடும்...சென்று அணைவார் - சீர்நாடுகின்ற தென்பாண்டி நன்னாட்டினைச் சென்று அணைவாராகி,
628
     2527. (இ-ள்.) மன்றல்...கடந்து ஏறி - மணமுடைய மலர்க்குவியல்களை இருபக்கங்களிலும் வீசிவருகின்ற பல நதிகளையும் சென்று அணைந்து கடந்து ஏறிப்போய்; திரிமருப்பின்...கடந்து - முறுக்குடைய கொம்புடைய கலைகளும் அவற்றோடு இணைந்து வரும் மான்களும் அவற்றின் கன்றுகளும் கூட்டமாகத் துள்ளிப் பாய் கின்ற நாடுகளின் இடையேசெல்லும் வழிகளைக் கடந்து; கொன்றை...கொடுங்