1494 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| | | புகைவிடும்....கொண்டுபோவார் - வேள்விச் செந்தீ - இஃது அம்மறையவர் வளர்க்கும் நித்தியாக்கினி; மறையவருள் இல்வாழ்வார் நித்தியமும் தீவளர்த்து வேட்கக் கடவர் என்பது வேதவிதிஆதலின் அத்தீயினைத் தாம் மனைவியருடன் செல்லுமிடங்களிலும் தவிராது வளர்த்தற்பொருட்டுக் கொண்டுசெல்லக் கடவர்; இல்லுடன் - இவ்வேள்வி மனையாளோடன்றிச் செய்யப்படாமை குறிப்பு. புகைவிடும் - மண வேள்வியிற் றொடங்கிய நித்தியாக்கினி சாங்காறும் அவியாது காக்கப்படுவது என்பது குறிப்பு; தீயின் அவியாதநிலை என்பது பொருள். | | தகைவிலா விருப்பின் - தடுக்கலாகாத பெருவிருப்பினாலே; பதிகங்கள் - பிள்ளையாரது திருப்பதிகங்கள்;அவற்றின் பெருமையும், இறைவரருளிய மறையேபோன்று "மெய்த்திருவாக்" காகும் வாய்மையும் நேரிற் கண்டுணர்ந்தோர்க ளாதலின் வேதம் பயிலும் இம்மறையவர்கள் தடுக்கமுடியாத பெருவிருப்புக் கொண்டு ஓதினர்; தகைதல் - தடுத்தல்; விலக்குதல். மிக்க - மிகுந்த அருட்பெருமையுடைய. | | வகை அறு பகை - பகை ஆறாவன - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பன; இவை வெளித்தோற்றாது உண்ணின்றே மக்களை வீழ்த்தலின் பகை என்றார்; வகை என்றது உட்பகை, புறப்பகைஎன்ற இரண்டனுள் வலிமையுடையது உட்பகை என்றதும் குறிப்பு; உம்மை முற்றும்மை. செற்றமையால் மாதவர் என்று காரணக் குறிப்புப்பட வந்த அடைமொழி; மாதவர் - மேம்பட்ட அந்தணர்களைக் குறித்தது; இயல்பின் - தத்தமக் கியல்பாகிய சிறப்பினாலே. | | 1202 | | 3101. (வி-ரை.) அறுவகை விளங்கும் சைவம் - இவை நால்வகைச் சமயப் பாகுபாட்டில் சைவத்துள் அகச்சமயம் என வகுக்கப்பட்ட பாடாணவாதம், பேதவாதம், சிவ சமயவாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுவரவவிகாரவாதம், சிவாத்துவிதம் என்பன. | | நால்வகைச் சமயத்தவருள், ஏனை மூவருள் உலகாயதமும் நால்வகைப் பௌத்தமும் ஆருகதமும் என்ற அறுவகை புறப்புறச் சமயத்தவரும்; தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என்ற அறுவகைப்என்ற அறுவகைப் புறச்சமயத் தவரும் ஈண்டுப் பிள்ளையார் திருமணங் காண வருதற்கியைபில்லை; இனிப், பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வயிரவம், ஐக்கியவாதம் என்ற சமயத்தினர் சிற்சில வகைகாளற் சைவரோடொப்பினும், தத்தம் நெறிகளானும் முடிபுகளானும் மாறுபாடுடையார். | | அவரெல்லாம் சித்தாந்த சைவரோடொப்ப "ஏக னனேக னிருள்கரும மாயையிரண்டு" (திருவருட்பயன் - 6 - 2) என்ற ஆறு பதார்த்தங்களுங் கொள்ளாமையானும், அவ்வறுவகைப் பதார்த்தங்களின் இயல்பைக் கொளளுத்தினுங் கொள்ளமாட்டாராகலானும் "புறச்சமயத் தவர்க்கிருளாய்" (சிவப் - பாயிர - 7) என்றபடி அவரையும் நீக்கி அறுவகை அகச்சமயத்தவரே ஈண்டுக் கருதப்பட்டனர். | | இனி இவ் வகச்சமயத்தோராகிய பாடாணவாத சைவர் முதலியோர் சித்தாந்த சைவத்தோடொப்ப ஏகன் முதலிய ஆறுபதார்த்தங் கொண்டமையின் அவ்வாறுக்கும் பொதுவியல்பு சிறப்பியல்பு கூறும் ஆகமங்களின் தாத்பரியம் இதுவேயென்று எடுத்துக்காட்டிச் சித்தாந்த சைவப் பொருளுண்மையக் கொளுத்தினாற் கொள்ளவல்லுவராதலின் அவர் ஈண்டு வருதற்கியைபுடையார்; "அகச்சமயத் தவர்க்கொளியாய்" (சிவப் - பாயிர - 7) என்பது காண்க. அதனால் இனி, இவர் | | சிவஞான மாபாடியம் - 2 - 1 பார்க்க. |
|
|
|
|