பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்787

 உள்ளோரும்...சேர்ந்தார் - வெளியே உள்ளவர்களும் பாண்டியனது மதுரைமா நகரத்திற் சேர்ந்தனர்.
 (வி-ரை) உற்பாதம் - துன்னிமித்தம்; மேலே கூறியவை; மெய்ப்படு தீக்கனா - கனவில் நிகழ்ந்தவை நகவில் மறந்து படுவனவும், பயன் குறியாதொழிவனவு முள்ளனவாதலின் அவற்றை நீக்குதற்கு மெய்ப்படுகனா என்றும், கனாக்கள் நன்மையும் கலந்து பயப்பனவுளவாதலின் அவற்றை நீக்குதற்குத் தீக்கனா என்றும் கூறினார். பிறிதினியைபு நீக்கிய விசேடணங்கள்;
 கண்டு - கனவு நிலையில் கண்டு; செப்புவான் - சொல்லும் பொருட்டு; வானீற்று வினையெச்சம்;
 புறத்துளோரும் - சேர்ந்தார் - புறத்து - மதுரைநகரின் புறத்து; யானைமலை முதலியவற்றினின்றும்; புறத்துளோரும் - என்ற உம்மை அகத்து - நகரத்து - உள்ளோர் அணைதலேயின்றி என இறந்தது தழுவிய எச்சவும்மை; புறத்துள்ளோர் கூடியபோது நகரத்துள்ளோர் கூடியமை கூறாமயேமையுமாதலின் அதனை வேறு எடுத்துக் கூறாராகி எச்வும்மையாற் பெறவைத்தார் ஆசிரியர். மேல்வரும் பாட்டுப் பார்க்க;
 தீக்கனா - இவை மேல் 2535 முதல் 2538 வரை நான்கு பாட்டுக்களிற் கூறுதல் காண்க.
 

635

 அமணர்க்கு நிகழ்ந்த தீக்கனாக்கள்
2534
ந்நகர் தன்னில் வாழ்வார் புறம்புநின் றணைவார் கூடி
மன்னவன் றனக்குங் கூறி மருண்டவுள் ளத்த ராகித்
துன்னிய வழுக்கு மெய்யிற் றூசிலார் பலரு மீண்டி
"யின்னன் கனவு கண்டே" மெவெடுத் தியம்ப லுற்றார்.
 

636

2535
"சீர்மலி யசோகு தன்கீ ழிருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டன; மதன்பின் னாக
ஏர்கொண்முக் குடையுந் தாமு மெழுந்துகை நாற்றிப் போக
ஊருளோ ரோடிக் காணக் கண்டன; " மென்று ரைப்பார்.
 

637

2536
"குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி யோடப்
பண்டிதர் பாழி நின்றுங் கழுதைமேற் படர்வார் தம்பின்
ஒண்டொடி யியக்கி யாரு முறையிட்டுப் புலம்பி யோடக்
கண்டன; " மென்று சொன்னார் கையறு கவலை யுற்றார்;
 

638

 2534. (இ-ள்) அந்நகர்...கூறி - அந்நகரில் உள்ளோரும் வெளியினின்றும் அணைவார்களும் கூடி அரசனுக்கும் அறிவிப்பு அனுப்பிச் சென்று; மருண்ட... ஈண்டி-மருட்சி கொண்ட மனதுடையவராகி அழுக்குப்படிந்த உடம்பில் துணியில்லாத அமணர் பலரும் நெருங்கிச் சேர்ந்து; "இன்னன...இயம்பலுற்றார் - இன்னின்ன கனாக்களைக் கண்டோம் என்று எடுத்துச் சொல்வார்களாகி,
 

634

 2535. (இ-ள்) "சீர்மலி...கண்டனம்" - சிறப்புடை அசோகமரம் அதன் அடியில் அமர்ந்தருளிய நமது அருகக்கடவுளின் மேலே வேரோடு சாய்ந்தும் வீழக் கண்டோம்; அதன் பின்னாக...என்று உரைப்பார் - அதன் பின்னே, அழகிய முக்குடையும் தாமுமாக அத்தேவர் எழுந்து கைகளைத் தொங்கவிட்டுச் செல்லவும், அதனை