| புணர்த்தியோதினார்; திருவவதாரத்தின் தன்மையாலே நமது பிரானாராய் வந்தவா என்றலுமாம்; வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க...அழுத"(1899) என்ற குறிப்பும்பட நின்றது. |
| "இங்கெழுந்தருள உய்ந்தோம் " என - இது எதிர்கொள்ளும் முறை பற்றி அம்மையார் தமது திருவுள்ளக் கருத்தைக் கூறியது; எழுந்தருள - எழுந்தருளப் பெற்றதனால்; எழுந்தருளுவதனால் எனக் காரணப் பொருளில் வந்த வினையெச்சம். |
| உய்ந்தோம் - இறந்த காலம் உறுதியும் விரையும் குறித்தது. என - என்ற கருத்துடன் நல்வரவு கூறி; இக்கருத்தையே அமைச்சர் பெருமானார் பின்னர் பிள்ளையார் திருமுன்பு தமது முறையால் விரித்துக்கூறிய நிலை கண்டுகொள்க; இன்றெழுந்தருளப் பெற்றபே றிதனா லெற்றைக்குந் திருவரு ளுடையோம் - நற்றமிழ் வேந்தனுழுய்ந்து - மேன்மையும் படைத்தனம் (2557) என்ற அருமையா திருப்பாட்டின் கருத்துக்களை இங்கு வைத்துக் காண்க: |
| 645 |
2544 | மன்றலங் குழலி னாரை வணங்கிப்போந் தமைச்ச னாரும் வென்றிவே லரச னுக்கு முறுதியே யெனவி ரைந்து பொன்றிகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி யின்றமிழ் மறைதந் தாரை யெதிர்கொள வெய்துங் காலை.. | |
| 646 |
2545 | அம்புய மலராள் போல்வா "ராலவா யமர்ந்தார் தம்மைக் கும்பிட வேண்டு" மென்று கொற்றவன் றனக்குங் கூறித் தம்பரி சனங்கள் குழத் தனித்தடை யோடுஞ் சென்று நம்பரை வணங்கித் தாமு நல்வர வேற்று நின்றார். | |
| 647 |
| 2544. (இ-ள்) மன்றலம்...போந்து - மணம் பொருந்திய கூந்தலினையுடைய மங்கையர்க்கரசியம்மையாரை வணங்கிச் சென்று; வென்றி...என - வெற்றிவே லேந்திய மன்னவனுக்கும் இச்செயல் உறுதி பயப்பதாகும் என்று உட்கொண்டு; விரைந்து...போகி - பொன் வேலைப்பாடுகள் பொருந்திய விளங்கும் மாடங்களையுடைய திருவீதிகளின் புறத்தில் விரைந்துசென்று; இன்தமிழ்...காலை - இனிய தமிழினால் வேதங்களை அருளிச்செய்து தந்த பிள்ளையாரை எதிர்கொள்ளும் பொருட்டுச் சேர்கின்றபோது, |
| 646 |
| 2545. (இ-ள்) அம்புயமலராள் போல்வார் - தாமரை மலரில் வீற்றிருப்பவன் போல்பவராகிய மங்கையர்க்கரசியம்மையார்; ஆலவாயமர்ந்தார் தம்மை...கூறி - திருவாலவாயுடைய பெருமானைத் தாம் சென்று கும்பிடவேண்டுமென்று அரசனுக்கும் கூறி, தம் பரிசனங்கள்...சென்று - தமது பரிசனங்கள் சூழ்ந்துவரைத் தனித்த காவலுடனே சென்று; நம்பரை வணங்கி - திருவாலவாயுடைய பெருமானாரை வணங்கி; தாமும்...நின்றார் - தாமும் பிள்ளையாரை நல்வரவேற்கும் முகத்தால் நின்றனர். |
| 647 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன. |
| 2544. (வி-ரை) வணங்கிப்போந்து - அரசியாரது கட்டளையை மேற்கொண்டு அதனைச் செய்துமுடித்தற் பொருட்டு விடைபெற்றுக்கொள்ளும் வகையால் வணங்கிச் சென்றனர்; போந்து - அரண்மனையினின்றும் புறம்போந்து; |
| போந்து - விரைந்து -போகி-எய்தும் - என்று கூட்டி முடிக்க. வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என - அச்செயல் அரசியின் கட்டளையை நிறைவேற்றும் |