பக்கம் எண் :

798திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 பட முன் நிறுத்திய, கொச்சகக் கலிப்பாவினாலே மீண்டும் யாத்த நயமும் காண்க. இடைப்பட்ட எல்லாம் வேறாகிய அறுசீர் விருத்தமாதலும் காண்க.
 திருநிலவு - திரு - சிவனது அருட்பெருகும் திரு; சிவனருளால் வந்த திரு; மணி - அழகிய; மணியாகிய என்றலுமாம்.
 சிவிகையின்மேற் சேவித்து வரும் மதிபோல் - குடைநிழற்ற - சிவிகையின் மேல் கவித்த முத்துக்குடை ஒரு மதிபோன்றிருந்தது; மதி அங்கு நிற்கும் இயைபு என்னை? எனின் மதியாதலின் மேனின்று சேவித்தது போல நின்றது என்பதாம்; குடைக்கு மதி மெய்பற்றி வந்த உவமம்; சேவித்து வரும் மதி என்றது தற்குறிப்பேற்றம்; மதிமுதல் வானவர் பிள்ளையாரைச் சேவித்து வரத்தக்கார் என்பதும் உட்குறிப்பு; 137, 1395, வெள் - சருக் - 34 முதலியவை பார்க்க. "சதுரானனனுஞ் சக்ராயுதனும், சந்த்ராதவரும் இந்த்ராதியரும், மதுரா புரிவா தறிவா மெனமேமல் வரவந்தனன் வைதிக வாரணமே"(தக்கயா); மதி - பாண்டியர் குல முதல்வன் என்பதும் குறிப்பு.
 பெருகுஒளிய திருநீறு - இதுவரை "பூதி சாதன விளக்கம் போற்றல் பெறா தொழிந்த" நிலை மாறி, இனி அத்திருநீற்றின் ஒளி பாண்டிய நாட்டிற் பெருக நிகழ்வது குறிப்பு; ஏனைய ஒளிகள் யாவும் குறைந்தொழிய, அவ்வாறு குறைந்தழியாது நித்தமாய்ப் பெருகும் ஒளியாகிய திருநீறு என்ற கருத்தும் காண்க; ஞானம் பெருகும் ஒளி என்றலும் ஆம்.
 பெருகிவர - அங்கங்கும் தொண்டர் கூட்டம் வந்து சார்ந்து பெருக. இனிப் பாண்டி நாட்டிற் பெருகி வரும்படி என்றலுமாம்.
 வளரொளி வெண்குடை போல் நிழற்ற - அம்முத்தின் ஒளியே போலப் பெருகொளிய திருநீற்றுத் தொண்டர் குழாம் புடைசூழ என்ற நயமும் காண்க; வெண்ணீற்றொளி போற்றி நின்று"(2214) என்ற கருத்தைச் சிந்திக்க.
 அருள்பெருக - அமுதுண்டார் - உலகில் சிவனருள் பெருகும்படி தாம் அமுதுண்டவர்; ஏனையோர் அமுதுண்டால் அது அவ்வவர்க்கே சில நலந் தந்தொழிய இவர் அமுதுண்டமை உலகில் யாவர்க்கும் சிவனருள் பெருகச் செய்தது; "திருத்தோணியமர்ந்த பிரானருள் பெருக"(1924)
 வரும் - உலகில் வந்தவதரித்த; அருள்பெருக வரும் - சிவனருள் பெருகிப் பாண்டி நாட்டில் நிகழும் பொருட்டுவரும் என்ற குறிப்பும் காண்க.
 வளர்ஞானத்தமுது - என்பதும் பாடம்.
 

648

2547
துந்துபிகண் முதலாய தூரியங்கள் கிளராமே
அந்தணரா மாதவர்க ளாயிரமா மறையெடுப்ப,
வந்தெழுமங் கலநாத மாதிரமுட் படமுழங்கச்
செந்தமிழ்மா ருதமெதிர்கொண் டெம்மருங்குஞ் சேவிப்ப,
 

649

2548
ண்ணியவஞ் சனைத்தவத்தாற் பஞ்சவனாட் டிடைப்பரந்த
எண்ணிலம ணெனும்பாவ விருஞ்சேனை யிரிந்தோட
மண்ணுலக மேயன்றி வானுலகுஞ் செய்தபெரும்
புண்ணியத்தின் படையெழுச்சி போலெய்தும் பொலிவெய்த,
 

650