பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்799

2549
துன்னுமுழு வுடற்றுகளாற் சூழுமுணர் வினிற்றுகளால்
அன்னெறியிற் செறிந்தடர்ந்த வமண்மாசு கழுவுதற்கு
மன்னியொளிர் வெண்மையினாற் றூய்மையினால் வழுதியர்தங்
கன்னிநாட் டிடைக்கங்கை யணைந்ததெனுங் கவின்காட்ட,
 

651

2550
பானல்வயற் றமிழ்நாடு பழிநாடும் படிபரந்த
மானமிலா வமணென்னும் வல்லிருள்போய் மாய்வதனுக்
கானபெரு கொளிப்பரப்பா லண்டமெலாங் கொண்டதொரு
ஞானமணி விளக்கெழுந்து வருவதென நலம்படைப்ப,
 

652

2551
புரசைவயக் கடகளிற்றுப் பூமியர்வண் டமிழ்நாட்டுத்
தரைசெய்தவப் பயன்விளங்கச் சைவநெறி தழைத்தோங்க
வுரைசெய்திருப் பேர்பலவு மூதுமணிச் சின்னமெலாம்
"பரசமய கோளரிவந் தா"னென்று பணிமாற,
 

653

 

வேறு

2552
இப்பரி சணையுஞ் சண்பையர் பெருமா னெழுந்தரு ளும்பொழு திசைக்கும்
ஒப்பினித் திலப்பொற் றனிப்பெருங்காளமுல குய்ய வொலித்தெழு மோசை
செப்பரும் பெருமைக் குலச்சிறை யார்தஞ் செவிநிறை யமுதெனத்தேக்க
அப்பொழு தறிந்து தலத்தின்மேற் பணிந்தே யளப்பருங் களிப்பினரானார்.
 

654

 2547. (இ-ள்) துந்துபிகள்...மறை எடுப்ப - துந்துபி முதலாகிய வாத்தியங்களின் ஓசை மேலெழாமல் அந்தணர்களாகிய மறை முனிவர்கள் அனந்தமாகிய வேதங்களை எடுத்தியம்பவும்; வந்தெழும்...முழங்க - வந்து எழுகின்ற மங்கல நாதங்கள் எல்லாத் திசைகளும் உட்பட முழங்கவும்; செந்தமிழ்...சேவிப்ப - செந்தமிழுடன் பொருந்தி வரும் தென்றற் காற்றும் எதிர்கொண்டு வரவேற்று எப்பக்கமும் சேவிப்பவும்,
 

649

 2548. (இ-ள்) பண்ணிய...பரந்த - செய்த வஞ்சனை பொருந்திய தவம் முன்னிலையாகப் பாண்டிய நாட்டில் பரவிய; எண்ணில்...இரிந்தோட - எண்ணில்லாத சமணம் என்னும் பாவமாகிய பெரிய சேனை உடைந்து ஓடும்படியாக; மண்ணுலகமே யன்றி... செய்த - இந்நிலவுலகமே யல்லாமல் விண்ணுலகமும் கூடிச் செய்ததாகிய; பெரும்...பொலிவெய்த - பெரிய புண்ணியமாகிய படை எழுச்சி போலப் பொருந்திய பொலிவு உண்டாகவும்;
 

650

 2549. (இ-ள்) துன்னும்...துகளால் - நெருங்கிப் பொருந்தி முழுவுடலில் உள்ள அழுக்கினாலும், தீய சூழ்ச்சியை உடைய உணர்வின் மாசினாலும்; அல் நெறியில்...கழுவுதற்கு - நெறியல்லா நேறியில் முழுதும் சேர்ந்த சமணம் என்னும் அழுக்கினைக் கழுவிப் போக்கித் தூய்மையாக்குதற்காக; மன்னியொளிர்...தூய்மையினால் - நிலைபெற்று விளங்கும் வெண்மையினாலும் தூய தன்மையினாலும்; தங்கை - கங்கை நதியே; வழுதியர்...இடை - பாண்டியரது கன்னி நாட்டிலே; அணைந்தது எனும் கவின் காட்ட - வந்து சேர்ந்தது போன்ற அழகினை எடுத்துக் காட்டவும்;
 

651

 2550. (இ-ள்) பானல்...பரந்த - கருங்குவளை மலர்களையுடைய வயல்கள் சூழ்ந்த தமிழ் நாடானது பழியைச் சேரும்படி அங்குப் பரவிச் சூழ்ந்த; மானமிலா...மாய்வதனுக்கு - மானமில்லாதஅமணர் என்னும் வலிய இருளானது கெட்டுப்போய்