| 3756. | திருமஞ் சனமுங் கொணர்ந்துதிரு வலகு மிட்டுத் திருமெழுக்கு வருமன் புடனின் புறச்சாத்தி மற்று முள்ள திருப்பணிகள் பெருமை பிறங்கச் செய்தமைத்துப் பேணும் விருப்பிற் றிருப்பாட்டும் ஒருமை நெறியி னுணர்வுவர வோதிப் பணிந்தே யொழுகுநாள், 9 |
| 3757. | நீரின் மலிந்த கடலகழி நெடுமால் வரையின் கொடிமதில்சூழ் சீரின் மலிந்த திருநகர மதனிற் செங்கோற் பொறையனெனுங் காரின் மலிந்த கொடைநிழன்மேற் கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த் தாரின் மலிந்த புயத்தரசன் றரணி நீத்துத் தவஞ்சார்ந்தான். 10 |
| 3754. (இ-ள்) மண்...வளர்ந்து - உலகத்தில் சைவநெறி ஓங்கி வளரும் படி வளர்ந்து; முன்னைவழி...கருத்தினராய் - முற்செய் தவத்தின் வழியே தொடர்ந்து வந்த அன்பினாலே, மேலே கண் விளங்கும் நெற்றியினையுடைய சிவபெருமானது திருவடிகளையே பேணுகின்ற கருத்தினை உடையாராகி; உண்மேவிய அன்பினராகி - உள்ளத்திற் பொருந்திய அன்புடையராய்; உரிமை...புரியார் - தமது உரிமையாகிய அரசாட்சிக்குரிய தொழிலைச் செய்யாது; தெண்ணீர்...புரிவார் - தெளிந்த நீரினைச் சடையிற்றரித்த சிவபெருமான் விளங்க எழுந்தருளிய திருவஞ்சைக் களத்தில் திருத்தொண்டினையே செய்வாராய், 7 |
3755. (இ-ள்) உலகின்....உணர்வார் - உலகவாழ்வும், அரசவாழ்வும் நிலையில்லாதன என்று உணர்வாராகி; புலரி...மூழ்கி - விடியற்காலையில் எழுந்து தண்ணீரில் முழுகிக் குளித்துத் தூய்மை தரும் திருவெண்ணீற்றினும் குளித்து; நிலவு....செய்து - நிலைபெற்ற திருநந்தன வனத்திலே நீடுகின்ற திருப்பணிகள் பலவற்றையும் செய்து; மலரும்...அமைத்து - பூக்களையும் முகைகளையும் கொணர்ந்து திருமாலைகளைச் சாத்துவதற்கு மகிழ்ச்சியுடனே அமைத்து 8 |
3756. (இ-ள்) திருமஞ்சனமும்...சாத்தி - திருமஞ்சனமுங் கொண்டு வந்து திருவலகும் இட்டுத் திருமெழுக்கும் வருகின்ற அன்போடும் இன்பம் பொருந்தச் சாத்தி; மற்றும்....அமைத்து - மேலும் உள்ள திருப்பணிகளையும் பெருமை விளங்கச் செய்து அமைத்து; பேணும்...ஒழுகுநாள் - பேணுகின்ற விருப்பத்தினாலே ஒன்றித்துச் செல்லும் ஒழுக்கத்தின் உணர்வுவரத் திருப்பாட்டுக்களையும் ஓதிப்பணிந்தே இவ்வாறு ஒழுகுகின்ற காலத்தில், 9 |
3757. (இ-ள்) நீரின்...திருநகரமதனில் - நீரினால் நிறைந்த கடல்போன்ற அகழியும் நீண்ட பெரிய மலைபோன்ற கொடிமதிலும் சூழ்ந்த சிறப்புமிக்க அத்திரு நகரத்திலே; காரின்...கீழ் - மேகத்தின் மிகுந்த கொடையின் நிழல் மேலேயும் அதன் கீழே கவிக்கும் வெண்கொற்றக் குடையின் நிழலுமாக அதன்கீழேயிருந்து; செங்கோற்பொறையனெனும் - செங்கோற்பொறைய னென்னும் பெயரையுடைய; தாரின்...சார்ந்தான் - மாலையணிந்த தோள்களையுடைய சேர அரசன் இவ்வுலகந்தாங்கும் செயலை நீத்துத் தவநெறிசாரத் தவ ஒழுக்கத்தினைச் சார்ந்தனன். |
| 10 |
இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
3754. (வி-ரை) மண்மேற் சைவநெறி வாழ என்றது உயிர்கள் சைவநெறியில் நின்று வாழ்வடைய என்றதாம். |
முன்னை வழி அன்பு - முற்செய்தவத்தால் உடன் வந்த அன்பு; “முன்பு செய்தவத்தி னீட்ட முடிவிலா வின்ப மான அன்பினை யெடுத்துக் காட்ட” (751) என் |