“யானை யணிகள்...செல்வன, மான மலைநாட்டினின்மலிந்த மலைகளுடன்போ துவ போன்ற” (3795) |
சேரர் குலமும் உலகும் செய் தவத்தால் - சேரர்குலம் விளங்கவும் உலகம் சிவநெறியில் ஓங்கி நலம் பெறவும் தாம்தாம் தவஞ் செய்ததன் பயனாக; பெருகுதவம் - அளவு படாது மேன்மேற் பெருகும் தவம். |
| அரனருளால் - தவத்தின் பயன் கொடுக்கும் சிவனருளாலே என்பதாம். |
பெருமாக் கோதையார் - கோதையார் - சேர அரசர்களது மரபுப் பெயர்; ஆர் - சிறப்புப் பன்மை; பெருமாக்கோதை - சேர அரசர்கள் பெயர் வழங்குமுறை. |
| | 5 |
3753. | திருமா நகரந் திருவவதா ரஞ்செய் விழவின் சிறப்பினால் வருமா களிகூர் நெய்யாட லெடுப்ப வான மலர்மாரி தருமா விசும்பின் மிக நெருங்கத் தழங்கு மொலிமங் கலந்தழைப்பப் பெருமா நிலத்தி லெவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால். 6 |
(இ-ள்) திருமாநகரம்...எடுப்ப - செல்வ நிறைந்த அப்பெரு நகரத்தவர் பெருமாக்கோதையார் திருவவதாரஞ் செய்த திரு விழாவின் சிறப்பினாலே வரும் பெருமகிழ்ச்சி மிக்கு நெய்யாடல் விழாக் கொண்டாட; வானம்...நெருங்க - கற்பகப் பூமாரி மழை பொழியும் ஆகாயத்தில் மிக நெருங்க; தழங்கும்....தழைப்ப - ஒலிக்கும் மங்கல வொலிகள் ஓங்கி முழங்க; பெரு...பிறங்கினவால் - பெரிய இவ்வுலகத்தில் எல்லாவுயிர்களும் மேன்மேலும் பெருகுகின்ற மகிழ்ச்சி பெற்று விளங்கின. |
(வி-ரை) விழவின் சிறப்பினால் - நகரம் - நெய்யாடல் - எடுப்ப என்க. நெய்யாடல் - நெய்யணி விழா; “திருமலிநெய் யாடல்விழாச் செங்காட்டங்குடி யெடுப்ப” (3677); “மீதணியு நெய்யணி விழாவொடு திளைப்பார்” (1933). |
தழங்கும் மங்கல ஒலி - தழைப்ப - தழங்குதல் - ஒலித்தல்; முழங்குதல்; இவை இயங்களின் ஓசையேயாயினும் மங்கலங்காட்டி எழுதலால் ஒலி என்றார்; மங்கல வொலி என்னாது ஒலிமங்கலம் என்றதன் குறிப்புமிது. தழைத்தல் - மேன்மேல் எழுதல். |
எவ்வுயிரும்....மகிழ்ச்சி பிறங்கின - யாவும் யாருங் கழறினவும் மறிந்து நீதிமுறை புரியும் அரசர் பெருமான் அவதரித்தமையால் எல்லாவுயிர்களும் மகிழ்ச்சியடைந்தன என்பது குறிப்பு. கழறிற்றறிவார் என்ற பெயர்க்காரணம் காண்க. பிறங்குதல் - விளங்குதல்; மகிழ்ச்சியில் விளங்கின. 6 |
| 3754. | மண்மேற் சைவ நெறிவாழ வளர்ந்து முன்னை வழியன்பாற் கண்மேல் விளங்கு நெற்றியினார் கழலே பேணுங் கருத்தினராய் உண்மே வியவன் பினராகி யுரிமை யரசர் தொழில் புரியார் தெண்ணீர் முடியார் திருவஞ்சைக் களத்திற் றிருத்தொண் டேபுரிவார், 7 |
| 3755. | “உலகி னியல்பு மரசியல்பு முறுதி யல்ல” வெனவுணர்வார் புலரி யெழுந்து புனன்மூழ்கிப் புனித வெண்ணீற் றினுமூழ்கி நிலவு திருநந் தனவனத்து நீடும் பணிகள் பலசெய்து மலரு முகையுங் கொணர்ந்துதிரு மாலை சாத்த மகிழ்ந்தமைத்து, 8 |