உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
38. கணநாத நாயனார் புராணம் - - - - - |
தொகை |
“கடற் காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்” |
-திருத்தொண்டத் தொகை - (6) |
வகை |
| தொண்டரை யாக்கி யவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித் தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண் கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறுங் கண்டல்வெண் சோறளிக் குங்“கடற் காழிக் கணநாதனே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (46) |
விரி |
3923. | ஆழி மாநிலத் தகிலமீன் றளித்தவ டிருமுலை யமுதுண்ட வாழி ஞானசம் பந்தர்வந் தருளிய வனப்பின தளப்பில்லா ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்துல கினுக்கொரு முதலாய காழி மாநகர்த் திருமறை யவர்குலக் காவலர் கணநாதர். 1 |
புராணம்:- கணநாத நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்த முறையானே ஏழாவது வார்கொண்ட வனமுலையாள் சருக்கத்தினுள் ஐந்தாவது கணநாத நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார். |
தொகை:- கடற்கரையினையுடைய சீகாழி நகரில் அவதரித்த கணநாதரது அடியார்க்கும் நான் அடியேனாவேன். |
கணநாதன் - சிவகணங்களுக்குத் தலைவர்; காரணப் பெயர்; இறைவரது பெயர்; இவருக்குச் சூட்டிக் காரணப்பெயராய் வழங்கியது. “கணநாதன்” (தாண்டகம் - காளத்தி); கடல் - கடல் சூழ்ந்த; கடலின்றாடு உள்ள. |
வகை:- கொண்டல்...சோறளிக்கும் - மேகங்களை இடமாகக் கொண்டு மேலேறி விளங்கிய மின்னலாகிய மகளுக்குத் தாழைகள் வெள்ளிய சோற்றினை அளிக்கும் கடற்கரையில் உள்ள சீகாழி நகரில் அவதரித்த வாழ்ந்த கணநாதரென்னும் அவரே; தொண்டரை ஆக்கி - தொண்டர்களை உண்டாக்கி; அவரவர்க்கு...செய்வித்து - அவ்வவர்களுக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி பணிகளிற் பழக்கிப் பணி செய்யும்படி செய்து; அண்டர் தம்...பெற்றவன்காண் - தேவர் தலைவராகிய சிவபெருமானது சிவகணத்துக்கு நாயகத் தன்மையினைப் பெற்றவர் காண்க. |