பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)208

     மேய் அத்திருத்தொண்டினில் - தொண்டு - நாயனார் செய்த எல்லாத்
திருப்பணிகளின் தொகுதியைக் குறித்தது. மேய - பொருந்திய.
 
     விளங்குவார் - விளங்குவாராகி; முற்றெச்சம். விளங்குவார் - பயில்விப்பார் -
ஆக்கி - மிக்கார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
 
     விரும்பி வந்தணைவார்க்கு - அத்திருப்பணிகளைச் செய்ய விரும்பித்
தம்மிடம் வந்து அணையும் அன்பர்களுக்கு. தம்மை விரும்பி வந்தடைந்தவர்கட்கு
என்றலுமாம்.
 
     தூய கைத் திருத்தொண்டு - தூய - தூய்மைப்படுத்துந் தன்மையுடைய; கைத்
திருத்தொண்டு
- சரியைப் பகுதிகள். இவை மேல்வரும் பாட்டில் விரிக்கப்படுவன;
சுத்த சைவத்துக்கு உயிராவது சரியை என்றருளினர் திருமூலதேவர். “சுத்த சைவத்துக்
குயிரதே” (திருமந் - 5 தந்); சைவத் திருத்தொண்டில் நிற்பவர்களேமேல் கிரியா
யோகங்களையும் முறையே ஞானத்தினையும் பெற்று வீடு பெறுவார்களாதலின்
அவ்வாறு பெறுதற்குரிய தூய்மையையும் தகுதியையும், முதற்கண் தருவது
கைத்தொண்டேயாம் என்பது.
 
     துறைதொறும் - சரியையின் துறைகள் பலவற்றிலும்; அவை மேல்வரும் பாட்டிற்
காணப்படும்; அவ்வவர் பக்குவ பேதம் நோக்கி, வெவ்வேறு தக்க துறைகள்
வேண்டப்படுவன.
 
     பயில்விப்பார் - பயிற்றுவார் (3926).                                2
 
     3925. (வி-ரை) நல்ல...பணி செய்பவர் - நல்ல - நன்மையாவது இறைவரை
அலங்கரிக்க வாய்த்த புனிதமாகிய செடி மரம் கொடிகளை வளர்த்தலும் காத்தலும்
சிவன்பணிக்குப் பயன்படுத்தலும் ஆகிய இவை தீமை கலவாத, கருணையே
உருவுடைய, பணி என்னும் தன்மை; செய்பவர் - நிலம் பண்படுத்தல், விதை - நாற்று
முதலியவை நடுதல், நீர்பாய்ச்சுதல். களை கட்டல் முதலாயினவை செய்தல்
எனப்பட்டன. பின்னர், அவ்வப்பணிகளின் தொழில்வகைக் கேற்றபடி மலர்
கொய்வோர் - தொடைபுனைபவர்
- மஞ்சனப் பணிக்கு உள்ளோர் -
அமைப்போர்கள் - எழுதுவோர் - வாசிப்போர் என்பது காண்க.
 
     நறுந்துணர் மலர் - மணமுடைய துணர்களில் கொய்யத்தக்க மலர்களை என்க.
துணர் - கொத்து; துணர்களில் அன்றலர்ந்தவையாய், காயரும்புகளும் முன்
அலர்ந்தவையும், அல்லாதவையாய்க், குற்றமற்ற மலர்களே தெரிந்து கொய்யத் தக்கன
என்பது; “கையினிற் றெரிந்து நல்ல கமழ்முகை யலரும் வேலை” (559). மலர்கள்
அலரும் பருவத்தே மணமுடையவாம் என்பதும் பெறவைத்தார்.
     தொடை - மாலை, கண்ணி, கோதை முதலிய பலவகையாலும் தொடுக்கப்படுவன.
பற்பலவாறு புனையப்படுதலின் புனைபவர் என்றார்.
 
     கொணர் திருமஞ்சனப் பணிக்குள்ளோர் - வேறிடத்துள்ள புனித
நீர்நிலைகளினின்றும் எடுத்துக் கொணர வேண்டியிருத்தலின் கொணர் என்றார்.
பணிக்கு உள்ளோர் - இப்பணி செய்வோர் தூய்மையு மரபும் முதலிய
தகுதியுள்ளோர்களேயாதல் வேண்டும் என்பது குறிப்பு.
 
     அல்லும்.....அமைப்போர்கள் - ஓரிடமும் விடாது உடல் முயற்சியினால்
ஒழுங்குபட அமைக்கப்படல் வேண்டுவன திருவலகும் திருமெழுக்குமாம் என்பது;
பலபேரும் வழிபடும் நிலைகளாதலின் இவை அல்லும் நண்பகலும் விடாது
செய்யப்படுதல் வேண்டும் என்பதுமாம். அல் - இரவு. நண்பகல் - உச்சிவேளை.
இவை வழிபாட்டு நேரங்களல்லாமையும் குறிக்க; காலை மாலைகளில் வந்து
வழிபடுவோர்க் கிடையூறின்றி முன் எச்சரிக்கையாய்ச் செய்யத்தக்கன என இவை
செய்தற்