உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
39. கூற்றுவ நாயனார் புராணம் - - - - - |
தொகை |
“ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்” |
- திருத்தொண்டத் தொகை (6) |
வகை |
“நாதன் றிருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல போதங் கருத்திற் பொறித்தமை யாலது கைகொடுப்ப வோதந் தழுவிய ஞாலமெல் லாமொரு கோலின்வைத்தான் கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே” |
- திருத்தொண்டர் திருவந்தாதி (47) |
விரி |
3930. | துன்னார் முனைக டோள்வலியால் வென்று சூலப் படையார்தம் நன்னா மந்தந் திருநாவி னாளு நவிலு நலமிக்கார் பன்னா ளீச ரடியார்தம் பாதம் பரவிப் பணிந்தேத்தி முன்னா கியநற் றிருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார். |
புராணம் :- கூற்றுவ நாயனாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, ஆசிரியர், நிறுத்த முறையானே, ஏழாவது, வார்கொண்ட வனமுலையாள் சருக்கத்தில், ஆறாவது கூற்றுவ நாயனாரது புராணம் கூறத் தொடங்குகின்றார். |
தொகை:- களந்தைப் பதியின் முதல்வராகிய கூர்மையுடைய வேலை ஏந்திய கூற்றுவருக்கு அடியேனாவேன். |
ஆர் - கூர்மை; ஆரெயிற் றழுந்தினர் (சிலப். 5, 124); ஆர் - அழகு என்றலுமாம். “கோதை நெடுவேல்” என்று இதனை ஆண்டது வகைநூல். ஊரும் பேரும் பண்பும் உரைத்தவாறு. |
வகை:- கோதை....கூற்றுவனே - மாலையணிந்த நெடிய வேறபடையை ஏந்திய களந்தைப் பதியின் முதல்வராகிய கூற்றுவரே; நாதன்....பொறித்தமையால் - தமது முடியிற் சிவபெருமான் சூட்டிய அவரது திருவடியினையே தமக்கு அரசமுடியாகச் சூட்டிக்கொண்டு நன்மை செய்யும் சிவஞானத்தைத் தமது திருவுள்ளத்திற் பதிய வைத்தமையால்; அது...வைத்தான் - அச்சிவஞானமே தமக்கு உற்ற துணையாகத் தாங்கக் கடல் சூழ்ந்த நிலவுலகம் முழுதும் தனது ஒரு செங்கோலின்கீழ் அடங்கி வாழச் செய்தார். |
நாதன் றிருவடி - நாதனுடைய திருவடி; முடியாக இருக்கும்படி இறைவர் இவரது முடியிற் சூட்டிய திருவடி; விரிவு புராணத்துள் “பாதமலரளிக்க” |