மாற்றார்....மேலானார் - பகையரசர்கள் அஞ்சி ஒதுங்கத்தக்க நால்வகைப் படைக் கருவிகளும் நிறைந்த வீரமுடைய செருக்கினால் மேம்பட்டார். |
(வி-ரை) அருளின் வலியால் - சிவன் றிருவருள் துணை செய்தமையால் அதன் வலிமையாலே; “அது கைகொடுப்ப” என்பது வகைநூல்; “மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி யுடைமையினால், எதிரிவருக் கிவ்வுலகி லில்லை” (3666) என்ற கருத்து. |
அரசு ஒதுங்க - அரசு - வலிய முடியரசர்களும் என்ற உயர்வு சிறப்பும்மை தொக்கது; அரசரல்லாத இவரது வலிமையினைக் கண்டு முடியரசர்களும் அஞ்சியும் தோல்வியுற்றும் ஒதுங்க என்பதாம். மேல் “வேந்தர் முனைகள் பலமுருக்கி” என்பது காண்க. |
அவனி எல்லாம் அடிப்படுப்பார் - பூமி முழுதும் தமது ஆணையின்கீழ் நிற்கச் செய்வாராகிய கூற்றுவநாயனார். வினையாலணையும் பெயர்; அடிப்படுப்பார் - மேலானார் - என்று முடிக்க. |
பொருளின்....பொலிவித்து - பொருள் - நால்வகைச் சேனைகளை வைத்துக் காப்பாற்றவும், உலக ஆணை யரசின் பிற அங்கங்கள் செலுத்தவும் ஆதரவாயுள்ள பொன், விளைபொருள் முதலாயினவற்றின் ஈட்டம். அளவும் காண்பரிய - எல்லை கூட அறிய இயலாத அளவில்; பொலிவித்து - சிறக்க ஈட்டி. முடிவு - எல்லை; அளவு. |
பொலிவித்து - விருத்தி செய்து; இகல் சிறக்க - போரில் வெற்றிகொண்டு விளங்கும்படி உதவுதற்கு; சிறக்க (உதவும்) கருவி - என்க. உதவும் என்பது இசையெச்சம். |
மருளும் - மருட்சியை விளக்கும்; கண்டோர் மருளுதற்குக் காரணமான. |
களிறு....நான்கு - நால்வகைச் சேனை; உயிருள்ளனவற்றையும் கருவி என்றார், தம் வயத்தானன்றிச் செலுத்துவோர் வயத்தாற் கருவிபோலச் செலுத்தப்படும் தன்மை பற்றி. கருவி - சேனை. |
மாற்றார் வெருளும் - பகைவர் இச்சேனைகளின் பெருக்கினைக்கண்ட மாத்திரையே அஞ்சத்தக்க; “தானை யானை குதிரை யென்ற, நோனா ருட்கு மூவகை நிலையும்” (தொல். பொரு - புற - 17). |
வீரச் செருக்கு - வீரத்தினால் உண்டாகிய இறுமாப்பு; பெருமிதம்; இது தள்ளத்தக்க குற்றங்களுள் ஒன்றாகிய குணமன்று என்பார் வீரம் என்ற அடைமொழி புணர்த்தி ஓதியதன்றி, மேலானார் என்றும் கூறினார். மேலாதல் - மிகுந்தநிலையன்றி மேம்படுதல் - மேன்மையடைதல் என்ற குறிப்புமுடையது. 2 |
| 3932. | வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பலமுருக்கிச் சென்று தும்பைத் துறைமுடித்துஞ் செருவில் வாகைத்திறங்கெழுமி மன்றன் மாலை மிலைந்தவர்தம் வளநா டெல்லாங் கவர்ந்து, முடி ஒன்று மொழிய வரசர்திரு வெல்லா முடைய ராயினார். 3 |
(இ-ள்) வென்றி....முறுக்கிச் சென்று - வெற்றிபெறும் செயலில் மேன்மேலும் பெருகும்படி வேந்தர்களுடன் பொருகின்ற போர்கள் பலவற்றிலும் முடுகி மேற்சென்று; தும்பை...மிலைந்து - (புறப்பொரு ளிலக்கணத்துப் பெறப்படும்) தும்பைப் பூச்சூடும் துறையின் போர்த்தொழில்களை முடித்தும், அப்போர்களில் வெற்றிபெற்றபின் வாகைமாலையின் வகையில் எழுகின்ற மணமுடைய மாலை |